ஞாயிறு, 19 மே, 2013

மனித வள விருத்தியும் தனிமனித முயற்சியும்

(2013-09-05 அன்று காங்கேயனோடை அல்-அக்ஸா மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற மாணவர் மன்ற நிகழ்வில் ஆற்றப்பட்ட உரை)

இந்தப் பிரபஞ்சப் பெருவெளியிலுள்ள இறைவனின் படைப்புக்களில் உன்னதமான படைப்பாக மனிதன் உள்ளான். உலகிலுள்ள வளங்களிலெல்லாம் மனித வளமே சிறந்ததாகக் கருதப்படுகிறது. மிகக் குறைவான பௌதீக வளத்தைக் கொண்ட நாடுகள்கூட மனிதவளத்தை வினைத்திறனாகக் கையாண்டு உச்சக்கட்ட வளர்ச்சியைக் கண்டுள்ளமையை வரலாறு நிருபித்துள்ளது.