ஒரு மாமனிதரின் உண்மை வரலாறு
• மனிதர்களுடன் வாழ்ந்து மனிதர்களின் நலனுக்காக உழைத்து அந்த சிந்தனையுடனேயே மரணித்த ஒரு மனிதரின் கதையே இது.• உயர் குடும்பத்தில் பிறந்தாலும் குழந்தைப்பருவத்திலேயே ஏழ்மை அவரை அரவணைத்துக் கொண்டது.
• பிள்ளைப் பருவத்திலேயே குடும்பத்தின் பொருளாதாரச் சுமையை தாங்க வேண்டி ஏற்பட்டதால், எந்த ஆசானிடமும் பாடம் படிக்கின்ற சந்தர்ப்பம் அவருக்கு கிடைக்க வில்லை.
• பள்ளியில் படிக்கா விட்டாலும் புத்திக் கூர்மையும் ஆழமான சிந்தனையும் தூர நோக்கும் இல்பாகவே அவரிடம் காணப்பட்டன.
• நேர்மையும்,உண்மையும் உயர் ஒழுக்கப் பன்புகளும் அவரது உதிரத்திலும் உயிரிலும் கரைந்து இருந்தன.
• இளம் வயதிலேயே திறமையான வியாபாரியாகவும் நேர்மையான மனிதராகவும் தம் சமூக மக்களின் உள்ளங்களில் இடம் பிடித்தார்.
• தமது வியாபாரப் பயணங்களின்போது ஒவ்வொரு சமூகக் குழுக்களினதும் சூழ்நிலையினையும் வாழ்வியலையம் கவனமாக உள்வாங்கினார்.
• தனது வியாபாரத்தில் முதலீட்டுப் பங்காளியாய் இருந்த, ஏற்கனவே இரு முறை திருமணமான விதவைப் பெண்னை திருமணம் செய்து, முற்போக்கான இல்லற வாழ்வில் இணைந்து கொண்டார்.
• அவர் வாழ்ந்த சமூகத்தில் மனித உரிமைகள் நலிவுற்று இருந்தன. இனவெறி சமூகத்தை துண்டாடி இருந்தது. பெண்களுக்கான உரிமைகள் முற்றாக மறுக்கப்பட்டு இருந்தன.
• சமூக ஒற்றுமைக்காக உருவாக்கப்பட்ட அமைப்புக்களில் அவரும் இணைந்து பணியாற்றினார். சமூகத்தில் பிணக்குகள் ஏற்பட்ட சந்தர்பங்களில் தனது புத்திக்கூர்மையால் அவற்றுக்கு தீர்வு கண்டாh.;
• தமது சமூகத்தின் பிற்போக்கான நிலையினைக் கண்டு கவலை கொண்டார். பிரபஞ்ச இயக்க ஆற்றல் அவரை வழி நடத்தியது. தான் பெற்ற சமூக சீர் திருத்தக் கருத்துக்களை மக்கள் முன் வைத்தார். தான் ஒரு தீர்க்கதிரிசி என்பதை பிரகடனப்படுத்தினார்.
• அவரினூடாக வெளிப்பட்ட சமூக சீர் திருத்தக் கருத்துக்கள், உயர்குல ஆதிக்க சக்திகளை நிலை தடுமாற வைத்தன. பாரம்பரிய, கோத்திர ரீதியான அடிமைத்துவ சமூக அமைப்பில் மாற்றம் ஏற்படப் போவதை அவை உணர்ந்து கொண்டன.
• இதனால் சமூகத்தலைமைகளின் ஏதிர்ப்புக்கு அவர் ஆளானார். அவரது இரத்த உறவுகளே அவருக்குப் பகையாய் மாறின. கொடுந் துன்பங்களை சுமந்தார்.
• ஈற்றில் தான்நேசித்த தாய் மண்ணையும் இழக்க வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது. தனது கொள்கையைச் சரிகண்ட தனது நண்பர்களோடு சொந்த மண்ணை விட்டு வெளியேறினார்.
• தனக்கு அடைக்கலம் கொடுத்த மண்ணிலே சமூக மாற்றத்திற்கான அடித்தளத்தை இட்டார். கொள்கைப் பிடிப்புள்ள அவரது நண்பர்கள் அவருக்கு பக்கத்துணையாய் நின்றார்கள்.
• உறுதியான ஓர் ஆட்சியை அந்த மண்ணில் அவர் உருவாக்கினார். வரலாற்றில் முதலாவது அரசியல் சாசனம் அந்த தேசத்தில்தான் உருபெற்றது.
• இருந்தபோதிலும், பல்முனை எதிர்ப்புக்களை அந்த தேசம் எதிர் கொண்டது. நாட்டையும் கொள்கையையும் காப்பதற்காக, பல யுத்தகளங்களை அந்த மாமனிதரும் அவரது தோழர்களும் சந்தித்தனர். யுத்த முனைகளில் தானே தளபதியாய் நின்று போராடினார்.
• பலம் பொருந்திய வல்லரசுகள் பல அந்த மாவீரரிடம் சரணைடைந்தன. இறுதியில், தான் பிறந்த மண்னையும் வெற்றி கொண்டார். தன்னைக் கொடுமைப்படுத்திய மக்களையும் அந்த மாமனிதரின் உள்ளம் மன்னித்தது.
• ஒரு நகரத்தில் கருக்கொண்ட அவரது அரசு மாபெரும் சாம்ராஜ்யமாக விரிவடைந்தது. உலகிலே மிகச் சிறந்த பொருளாதாரக் கொள்கையையும், காலங் கடந்தும் நிலைத்து நிற்கத்தக்க உறுதியான, நடைமுறைச் சாத்தியமான சட்டக் கோவையையும் அந்த நாடு கொண்டிருந்தது.
• தனிமனிதனாக சமூகப் புரட்சியை ஆரம்பித்த அந்த மனிதர், மாபெரும் வல்லரசொன்றின் ஆட்சித் தலைவராக மாறினார். மிக உயர்ந்த பண்பாடுகள் கொண்ட ஒரு சமூகமாக தனது நாட்டு மக்களை மாற்றினார்.
• மாபெரும் இராசதானியின் ஆட்சியாளராக இருந்த போதிலும், அன்னாரின் வாழ்க்கை எளிமையானதாகவே இருந்தது. அரச பொது நிதியில் அவர் சம்பளம் பெறவில்லை. தனது சொந்த வருமானத்திலே வாழக்கை நடாத்தினார். அவரது வீட்டில் மாதக் கணக்கில் அடுப்பு எரியாமல் இருந்தது. ஓலைப் பாயிலும் ஓலைச் சருகுகளால் நிரப்பப்பட்ட தலையனையிலுமே அந்த மாமன்னர் படுத்துறங்கினார்.
• அரசியல் தலைவராக இருந்த போதிலும் முன்மாதிரியான குடும்பத் தலைவராகவும் அவர் விளங்கினார். தனது மனைவியரை நேசித்தார். அவர்களது வீட்டு வேலைகளில் பங்கெடுத்தார். 'தனது மனைவிக்கு யார் நல்லவனோ, அவனே மிக் சிறந்த மனிதன்' என்று கூறினார்.
• தனது குழந்தைகளை முன்மாதிரியான நற்பிரஜைகளாக வளர்த்தெடுத்தார். எல்லாக் குழந்தைகளையும் தனது குழந்தைகளைப்போல நேசித்தார். ஆட்சியாளராக இருந்த நிலையிலும் குழந்தைகளோடு கொஞ்சி மகிழ்ந்தார். அன்பாக உறவாடி ஒழுக்கத்தைப் போதித்தார். 'சிறுவர்களுக்கு அன்பு காட்டாதவன், எம்முடைய ஆளல்ல' என்று கூறினார்.
• தனக்காக உயிரையும் கொடுக்கக் கூடிய மக்கள் சமூகத்தை அவர் உருவாக்கினார். ஆத்மீக ரீதியாக அவர்களை பயிற்றுவித்து உயர் பண்பாடு கொண்டவர்களாக மாற்றினார். ஓர் ஆட்சியாளராகவும் மிக உயர்ந்த ஆன்மீகத் தலைவராகவும் ஒரே நேரத்தில் பணியாற்றி அம்மக்களை வழி நடாத்தினார்.
• அடிமைத்தளையை அவர் உடைத்தார், சாதி வேற்றுமையைப் புதைத்தார், மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்தார், சமூகத்தில் பலவீனர்களும் பெண்களும் சிறுவர்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் கண்ணுங்கருத்துமாய் இருந்தார்.
• மூட நம்பிக்கைகளையும் பாரம்பரிய மூடப் பழக்க வழக்கங்களையும் தனது கால்களுக்குக் கீழே புதைத்துவிட்டதாக அறிவித்தார்.
• அதுவரை தோன்றியிருக்காத, இனி எக்காலத்திலும் தோன்ற முடியாத, உயர் மனிதப் பண்புகள் கொண்ட ஒரு சமூகத்தையும் உன்னதமானதொரு தேசத்தையும் உருவாக்கிவிட்டு, தனது பணியின் இலக்கினை தனது வாழ்நாளிலேயே அடைந்துவிட்ட திருப்தியோடு, தன் அன்பு மனைவியின் மடியில் இறுதி மூச்சு விட்டார்.
• அன்னார் மரணிக்கும் போது, அவரது போர்க்கவசங்கள் கோதுமை மாவுக்காக அடகு வைக்கப்பட்டிருந்தன. தனது குடும்பத்துக்காக எதனையும் அவர் விட்டுச் செல்லவில்லை. தனது சொத்துக்கள் யாவும், தனது மரணத்தின் பின், பொது நிதியில் சேரக்கப்பட வேண்டும் என அறிவித்திருந்தார்.
• தன்னை 'இறைவனின் சேவகன்' என்றே மக்களிடம் அறிமுகப்படுத்தினார். எந்தக் காலகட்டத்திலும் தன்னைப் பின்பற்றும் மக்களால் தான் கடவுளாக்கப்பட்டுவிடக்கூடாது என்பதில் கண்ணுங் கருத்துமாக இருந்தார். அந்த இலக்கிலும் வெற்றி பெற்றார். 'அனைவருக்கும் ஒருவனே இறைவன் ' என்ற அடிப்படைக் கோட்பாட்டின் மீதே தனது அத்தனை சாதனைகளையும் நிலைநாட்டினார்.
• இந்த அழகிய வாழ்வின் சொந்தக்காரர்தான் நபிகள் நாயகம் முகம்மது (ஸல்) அவர்கள். அந்த மாமனிதரைப் பற்றி பேரறிஞர் பேர்னாட் சா இப்படிக் கூறுகிரார். 'இந்தப் பூமியில் தோன்றிய மனிதர்களில் அவர் மிகவும் உன்னதமானவராக இருந்தார். அவர், ஒரு சமயத்ததை போதித்ததோடு ஓர் ஆட்சியை நிறுவினார். ஒரு தேசத்தை கட்டியெழுப்பினார், உயர் பண்பாடுகளை விதைத்தார். பல அரசியல், சமூக மாற்றங்களுக்கு வித்திட்டார். தனது போதனைகளை நடைமுறைப்படுத்தக்கூடிய பலம் பொருந்திய இயங்கு நிலைச் சமூகமொன்றை உருவாக்கினார்.
• ஜேர்மானியக் கவிஞரும் விஞ்ஞானியுமான Wolfwang gother அன்னாரைக் குறித்து இவ்வாறு இயம்பினார்: 'மனிதனுக்கான ஒரு முன்மாதிரியை வரலாறு நெடுகிலும் தேடினேன். அது முஹம்மத் (ஸல்) அவர்கள்தான் என்பதை கண்டுகொண்டேன்'
• வரலாற்றாசிரியரான Dr. Gustav weil இப்படிக் கூறுகிறார். 'முஹம்மத், அவரது மக்களுக்கு முன்னுதாரணமாக இலங்குகிறார். அவரது வீடு, உடை, உணவு என்பன மிகவும் எளிமையாக அமைந்திருந்தன.
• பிரபல எழுத்தளரான வொஸிங்டன் இர்விங் நபிகள் நாயகத்தின் வாழ்க்கையைப் பற்றி கூறும் வார்த்தைகள் இவை: ' நெருக்கடியான காலத்தில் இருந்தபோது எவ்வாறான எழிமையான தோற்றமும் நடத்தைகளும் தோற்றங்களும் அவரிடம் காணப்பட்டனவோ, அதே எளிமை மாபெரும் அதிகாரத்தைப் பெற்றவராக இருந்த நிலையிலும் அவரிடம் காணப்பட்டது.'
• மகா வீரரான நெபோலியன் பேர்னபார்ட் தமது ஆவலை இவ்வாறு வெளிப்படுத்தினார்: 'அனைத்து நாடுகளிலுமுள்ள கல்விமான்களையும் புத்திஜீவிகளையும் ஒன்றிணைத்து குர்ஆனின் கோட்பாடுகளை அடியொற்றியதான ஆட்சியொன்றினை நிறுவ நான் எதிர்பாரக்கின்றேன். அது ஒன்றே மனிதர்களிடையே மகிழ்ச்சியை உண்டுண்ணக்கூடிய மெய்யான மார்க்கமாகும்.
• அமெரிக்க வரலாற்றாசிரியரான மைக்கல்.எச்.ஹார்ட் தனது ஆய்வின் முடிவை இப்படி வெளியிடுகின்றார்: 'ஆன்மீகம், உலகியல் ஆகிய இரண்டிலும் ஒரு சேர வெற்றிபெற்ற மனிதர் அவர் மட்டுமே'
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக