நிகழ்வு:- 'மன நிறைவான குடும்ப வாழ்வை நோக்கி'
(செயற்றிட்ட முன்மொழிவுக் கருத்தரங்கு)
காத்தான்குடி, பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் அனுசரணையுடன் இலங்கை ஜமாஅதே இஸ்லாமி- காத்தான்குடி மன்றத்தினால் நடத்தப்பட்ட 'மனநிறைவான குடும்ப வாழ்வை நோக்கி' எனும் தலைப்பிலான செயற்றிட்ட முன்மொழிவுக் கருத்தரங்கு 2015-01-30 இரவு 8:00 மணிக்கு சம்மேளன தலைமையகத்தில் அமைந்துள்ள அஸ்ஷஹீட் அல்ஹாஜ் அஹமட் லெப்பை ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது. காத்தான்குடி, பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன தலைவர் அல்ஹாஜ் எம்.ஐ.எம்.சுபைர் JP அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கை, தென்கிழக்குப் பல்கலைக் கழக அறபு-இஸ்லாமிய கற்கைகள் பீடத்தின் பீடாதிபதியும் காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் தலைவருமான அஸ்ஸெய்க் ஏ.பீ.எம்.அலியார் (றியாழி) அவர்களால் 'இன்றைய குடும்பங்கள் எதிர்நோக்கியுள்ள சவால்களும் அதனைப் பாதுகாப்பதில் சமூகத் தலைமகளின் பொறுப்புக்களும்' எனும் தலைப்பில் சிறப்புரையாற்றப்பட்டது.