க.பொ.த(சாதாரண தர) பரீட்சையில் இஸ்லாம் பாடத்தில் காங்கேயனோடை அல்-அக்ஸா மகா வித்தியாலயம் சாதனை.
கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த (சா/த) பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், காங்கேயனோடை அல்-அக்ஸா மகா வித்தியாலயத்திலிருந்து பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் இஸ்லாம் பாடத்தில் சாதனை புரிந்துள்ளனர். பாடசாலையிலிருந்து குறித்த பரீட்சைக்குத் தோற்றிய 17 மாணவர்களும் இஸ்லாம் பாடத்தில் A தரத்திலான சித்தியினைப் பெற்று இச் சாதனையினை நிகழ்த்தியுள்ளனர். இம் மாணவர்களுக்கு இஸ்லாம் பாடத்தைக் கற்பித்த மௌலவி ஏ.ஜே.அகமட் அஸ்ரப் (பலாஹி) அவர்களுக்கும் நிருவாக ரீதியான வழிகாட்டலை வழங்கிய, பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம்.அப்பாஸ் (நளீமி) அவர்களுக்கும் பெற்றோரும் பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்களும் தமது பாராட்டுக்களைத் தெரிவிக்கின்றனர்.