நிகழ்வு:- இஸ்லாமிய உயர் கல்வி நிறுவனங்களுக்குச் செல்வோருக்கான வழிகாட்டற் கருத்தரங்கு
காத்தான்குடி பிரதேச செயலக மனிவலு வேலை வாய்ப்புத் திளைக்கள மனிதவள அபிவிருத்திப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'இஸ்லாமிய உயர் கல்வி நிறுவனங்களுக்குச் செல்ல விரும்புவோருக்கான வழிகாட்டற் கருத்தரங்கு' இன்று (12-04-2015) மு.ப 10:00 மணிக்கு காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இலங்கை ஜமாஅதே இஸ்லாமி – காத்தான்குடி மன்றத்தின் அனுசரணையுடன் நடைபெற்ற இந்நிகழ்வில், அம்பாரை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளரான அஷ;ஸெய்க் அன்சார் (நளீமி), சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தரான அஷ;ஸெய்க் வஹாப் (இஸ்லாஹி), அஷ;ஸெய்க் எம்.ரீ.எம். சப்ரி (நளீமி) ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கினர்.