புதன், 3 ஆகஸ்ட், 2016

தேசிய சுஹதாக்கள் தின நிகழ்வுகள் - 2016

26வது தேசிய சுஹதாக்கள் தின நிகழ்வுகள் இன்று (03.08.2016) காலை காத்தான்குடி-01 மீரா  பெரிய ஜும்ஆ மஸ்ஜிதில் நடைபெற்றன. சுஹதாக்கள் தின விசேட சொற்பொழிவு, பள்ளிவாயலின் பேஷ இமாம்களுள் ஒருவரான, மௌலவி அல்-ஹாபிழ் ஏ.ஏ.அப்துர் ரஹ்மான் முப்தி அவர்களால் நிகழ்த்தப்பட்டது. கத்தமுல் குர்ஆன், துஆ பிரார்த்தனை நிகழ்வுகளும் இடம்பெற்றன. 1990.08.03 அன்று காத்தான்குடி மஸ்ஜிதுல் மீரா பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல் மற்றும் ஹுஸைனியா பள்ளிவாயல் ஆகியவற்றில் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் தமிழ் ஆயுததாரிகளால் கொலைசெய்யப்பட்ட நிகழ்வினை அடையாளப்படுத்தும் வகையிலும் அக்காலப்பகுதியில் ஏனைய முஸ்லிம் இனப் படுகொலைகளை நினைவுகூருமுகமாகவும் இத்தினம் வருடாவருடம் அனுஷ;டிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.