சனி, 8 ஜூன், 2013

நிகழ்வு-'நன்மை செய்யும் சமூகமே வெற்றி பெறும் கமூகம்' (இஜ்திமா)

இலங்கை ஜமாஅதே இஸ்லாமி, காத்தான்குடி உப பிராந்தியத்தின் ஏற்பாட்டில் ஹிஜ்ரி 1434ம் ஆண்டுக்கான 'நன்மை செய்யும் சமூகமே வெற்றி பெறும் சமூகம்' எனும் தொனிப்பொருளிலான இஜ்திமா (ஒன்றுகூடல்) நிகழ்வு 07-06-2013 அன்று இஸர் தொழுகை முதல் இரவு 9.30 மணிவரை புதிய பாலமுனை முஹிதீன் ஜூம்ஆப் பள்ளி;வாயலில் நடைபெற்றது. 
இஜ்திமா நிகழ்வுகள் பிற்பகல் 4.00 மணியளவில் அல்ஹாபிழ் ஏ.எம்.அஸ்பாக் அவர்களின் கிராஅத்துடன் ஆரம்பமாகின. இஜ்திமா நிகழ்வுகளை மௌலவி ஜே.எம்.றமீஸ் (ஹாமி) அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.