நிகழ்வு-இலங்கையின் 66வது சுதந்திர தினம்
இலங்கை ஒரு பல்லின சமூகத்தைக் கொண்ட நாடாகும். புல்வேறுபட்டபட்ட இயற்கை வளங்களையும் கொண்ட அழகிய நாடு இலங்கை. இலங்கையின் தரைத்தோற்றப் பல்வகைமை, உயிரினப் பல்வகைமை போன்று அதன் கலாச்சாரப் பல்வகைமையும் இந்நாட்டுக்கு அழகு சேர்ப்பதாகும். இத்தகைய புரிந்துணர்வும் மனப்பாங்கும் இந்நாட்டு மக்களின் உள்ளங்களில் ஏற்படுத்தப்படும்போதுதான் இலங்கை சமாதான பூமியாக அன்பினாலும் அரவணைப்பினாலும் மனிதாபிமானத்தினாலும் மேலும் அழகுபடுத்தப்படும்.