செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

நிகழ்வு-இலங்கையின் 66வது சுதந்திர தினம்

இலங்கை ஒரு பல்லின சமூகத்தைக் கொண்ட நாடாகும். புல்வேறுபட்டபட்ட இயற்கை வளங்களையும் கொண்ட அழகிய நாடு இலங்கை. இலங்கையின் தரைத்தோற்றப் பல்வகைமை, உயிரினப் பல்வகைமை போன்று அதன் கலாச்சாரப் பல்வகைமையும் இந்நாட்டுக்கு அழகு சேர்ப்பதாகும். இத்தகைய புரிந்துணர்வும் மனப்பாங்கும் இந்நாட்டு மக்களின் உள்ளங்களில் ஏற்படுத்தப்படும்போதுதான் இலங்கை சமாதான பூமியாக அன்பினாலும் அரவணைப்பினாலும் மனிதாபிமானத்தினாலும் மேலும் அழகுபடுத்தப்படும்.
இலங்கை மண்ணை அழகுபடுத்த மரங்களை விதைப்பதுபோல் இலங்கைப் பன்மைச் சமூகத்தின் வாழ்வியலை அழகுபடுத்த நாட்டு மக்களின் உள்ளங்களில் நல்லெண்ணெங்களை விதைப்பதும் அவசியமாகிறது. இதற்கான வேலைத்திட்டங்கள் நாடளாவிய ரீதியில் நடத்தப்படுவது அவசியமாகிறது. இலங்கையின் 66வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் இவ்வேளையில் இவ்வாறானதொரு மாற்றத்தை நோக்கிய பயணத்தை ஆரம்பிக்கவேண்டியது இந்நாட்டின் குடிமக்களாகிய அனைவரதும் பொறுப்பாகும்.

இலங்கையின் 66வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வில் நாடளாவிய ரீதியில் நடைபெறுகின்றன. இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் காத்தான்குடி மன்றம் முக்கிய இரண்டு நிகழ்வுகளை சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தியது. சுதந்திர தின விசேட உரையுடன் கூடிய விசேட நிகழ்வொன்று காத்தான்குடி, மஸ்ஜித் அல்-பிர்தௌஸில் 04-02-2014 அன்று காலை 08:30 மணியளவில் நடைபெற்றது. அஷ;nஷய்க் எம்.எஸ்.எம்.நுஸ்ரி (நளீமி) அவர்களனால் 'இலங்கை நாட்டிற்கு முஸ்லிம்கள் வழங்கிய  பங்களிப்பும் தற்காலத்தில் முஸ்லிம்களின் பொறுப்புகளும்' எனும் தலைப்பில் விசேட உரை நிகழ்த்தப்பட்டது.

வைத்தியசாலை விடுதிகளில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு அன்பளிப்புப் பொதிகளை வழங்கும் நிகழ்வொன்று 04-02-2014 அன்று காலை 10:30 மணியளவில் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் நடைபெற்றது. வைத்தியசாலையில் கடமை புரியும் ஊழியர்களுடனான நட்புறவு ரீதியான கலந்துரையாடலொன்றும் இதன்போது இடம்பெற்றது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக