ஞாயிறு, 12 ஏப்ரல், 2015

நிகழ்வு:- இஸ்லாமிய உயர் கல்வி நிறுவனங்களுக்குச் செல்வோருக்கான வழிகாட்டற் கருத்தரங்கு

காத்தான்குடி பிரதேச செயலக மனிவலு வேலை வாய்ப்புத் திளைக்கள மனிதவள அபிவிருத்திப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'இஸ்லாமிய உயர் கல்வி நிறுவனங்களுக்குச் செல்ல விரும்புவோருக்கான  வழிகாட்டற் கருத்தரங்கு' இன்று (12-04-2015) மு.ப 10:00 மணிக்கு காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இலங்கை ஜமாஅதே இஸ்லாமி – காத்தான்குடி மன்றத்தின் அனுசரணையுடன் நடைபெற்ற இந்நிகழ்வில், அம்பாரை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளரான அஷ;ஸெய்க் அன்சார் (நளீமி), சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தரான அஷ;ஸெய்க் வஹாப் (இஸ்லாஹி), அஷ;ஸெய்க் எம்.ரீ.எம். சப்ரி (நளீமி) ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கினர்.

செவ்வாய், 31 மார்ச், 2015

க.பொ.த(சாதாரண தர) பரீட்சையில் இஸ்லாம் பாடத்தில் காங்கேயனோடை அல்-அக்ஸா மகா வித்தியாலயம் சாதனை.

கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த (சா/த) பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், காங்கேயனோடை அல்-அக்ஸா மகா வித்தியாலயத்திலிருந்து பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் இஸ்லாம் பாடத்தில் சாதனை புரிந்துள்ளனர். பாடசாலையிலிருந்து குறித்த பரீட்சைக்குத் தோற்றிய 17 மாணவர்களும் இஸ்லாம் பாடத்தில் A தரத்திலான சித்தியினைப் பெற்று இச் சாதனையினை நிகழ்த்தியுள்ளனர். இம் மாணவர்களுக்கு இஸ்லாம் பாடத்தைக் கற்பித்த மௌலவி ஏ.ஜே.அகமட் அஸ்ரப் (பலாஹி) அவர்களுக்கும் நிருவாக ரீதியான வழிகாட்டலை வழங்கிய, பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம்.அப்பாஸ் (நளீமி) அவர்களுக்கும் பெற்றோரும் பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்களும் தமது பாராட்டுக்களைத் தெரிவிக்கின்றனர்.

புதன், 4 பிப்ரவரி, 2015

நிகழ்வு:- 'சுதந்திர தினமும் நாமும்'
(தேசிய சுதந்திர தின விசேட சொற்பொழிவு)

இலங்கையின் 67 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை ஜமாஅதே இஸ்லாமி காத்தான்குடி மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'சுதந்திர தினமும் நாமும்' எனும் தலைப்பிலான விசேட சொற்பொழிவு 04-02-2015 இரவு இஷhத் தொழுகையின் பின் காத்தான்குடி-03 முகைதீன் மெத்தை பெரிய ஜூம்ஆ பள்ளிவாயலில் நடைபெற்றது. உரையினை தாழங்குடா தேசிய கல்வியியற் கல்லூரியின் விரிவுரையானர் அஸ்ஸெய்க் எம்.எல்.ஏ.வாஜித் (இஸ்லாஹி) M.A, M.Ed அவர்கள் நிகழ்த்தினார்கள்.
அவர்கள் தனதுரையில் முஸ்லிம்கள் இந்த நாட்டுக்கு ஆற்றிய பங்களிப்புக்கள் பற்றி எடுத்துக் கூறியதுடன் இந்த நாட்டு முஸ்லிம்கள் பெற்றிருந்த பாக்கியங்களுக்கு முக்கிய காரணம் இந்த நாட்டு மக்கள் இந்நாட்டு முஸ்லிம்கள் மீது வைத்திருந்த நல்லெண்ணமே என்பதையும் சுட்டிக் காட்டினார்கள்.

வெள்ளி, 30 ஜனவரி, 2015

நிகழ்வு:- 'மன நிறைவான குடும்ப வாழ்வை நோக்கி'
(செயற்றிட்ட முன்மொழிவுக் கருத்தரங்கு)

காத்தான்குடி, பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் அனுசரணையுடன் இலங்கை ஜமாஅதே இஸ்லாமி- காத்தான்குடி மன்றத்தினால் நடத்தப்பட்ட 'மனநிறைவான குடும்ப வாழ்வை நோக்கி' எனும் தலைப்பிலான செயற்றிட்ட முன்மொழிவுக் கருத்தரங்கு 2015-01-30 இரவு 8:00 மணிக்கு சம்மேளன தலைமையகத்தில் அமைந்துள்ள அஸ்ஷஹீட் அல்ஹாஜ் அஹமட் லெப்பை ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது. காத்தான்குடி, பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன தலைவர் அல்ஹாஜ் எம்.ஐ.எம்.சுபைர் JP அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கை, தென்கிழக்குப் பல்கலைக் கழக அறபு-இஸ்லாமிய கற்கைகள் பீடத்தின் பீடாதிபதியும் காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் தலைவருமான அஸ்ஸெய்க் ஏ.பீ.எம்.அலியார் (றியாழி) அவர்களால் 'இன்றைய குடும்பங்கள் எதிர்நோக்கியுள்ள சவால்களும் அதனைப் பாதுகாப்பதில் சமூகத் தலைமகளின் பொறுப்புக்களும்' எனும் தலைப்பில் சிறப்புரையாற்றப்பட்டது.