புதன், 4 பிப்ரவரி, 2015

நிகழ்வு:- 'சுதந்திர தினமும் நாமும்'
(தேசிய சுதந்திர தின விசேட சொற்பொழிவு)

இலங்கையின் 67 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை ஜமாஅதே இஸ்லாமி காத்தான்குடி மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'சுதந்திர தினமும் நாமும்' எனும் தலைப்பிலான விசேட சொற்பொழிவு 04-02-2015 இரவு இஷhத் தொழுகையின் பின் காத்தான்குடி-03 முகைதீன் மெத்தை பெரிய ஜூம்ஆ பள்ளிவாயலில் நடைபெற்றது. உரையினை தாழங்குடா தேசிய கல்வியியற் கல்லூரியின் விரிவுரையானர் அஸ்ஸெய்க் எம்.எல்.ஏ.வாஜித் (இஸ்லாஹி) M.A, M.Ed அவர்கள் நிகழ்த்தினார்கள்.
அவர்கள் தனதுரையில் முஸ்லிம்கள் இந்த நாட்டுக்கு ஆற்றிய பங்களிப்புக்கள் பற்றி எடுத்துக் கூறியதுடன் இந்த நாட்டு முஸ்லிம்கள் பெற்றிருந்த பாக்கியங்களுக்கு முக்கிய காரணம் இந்த நாட்டு மக்கள் இந்நாட்டு முஸ்லிம்கள் மீது வைத்திருந்த நல்லெண்ணமே என்பதையும் சுட்டிக் காட்டினார்கள். மேலும், இந்நாட்டில் இனத்துவப் பார்வைக்கப்பால், மதத்துவப் பார்வைக்கப்பால் தீர்த்து வைக்கப்பட வேண்டிய பிரச்சினைகள் பல உள்ளன. இந்த விடயத்தை உணர்ந்தமையினால்தான் மாறுபட்ட கருத்துக் கொண்ட பலர் நாட்டைக் கட்டியெழுப்பும் நோக்கில் ஒன்று சேர்ந்துள்ளார்கள் எனக் குறிப்பிட்ட அவர்கள், இந்நாட்டு முஸ்லிம்கள் இத் தருணத்தில் மிக முக்கியமாகக் கவனம் செலுத்த வேண்டிய விடயங்களாக பின்வருவனவற்றைக் குறிப்பிட்டார்கள்.

1.    இந்நாட்டில் முஸ்லிம்கள் பற்றி நிலவும் தப்பபிப்பிராயங்களை நீக்குதல். ஆவை முஸ்லிம்களாலேயே உருவாக்கப்பட்ட தப்பபிப்பிராயங்களாகவும் இருக்கலாம் அல்லது முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டோரினால் உருவாக்கப்பட்ட தப்பபிப்பிராயங்களாகவும் இருக்கலாம்.

2.    இந்நாட்டில் சகவாழ்வுக்கான அத்தனை ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுதல்.

3.    இந்த நாட்டை வளப்படுத்துவது சன்மார்க்கக் கடமை என்ற உணர்வோடு செயற்படல். பௌதீக ரீதியாக மட்டுமன்றி எமது பண்பாடுகளாலும் சிந்தனைகளாலும் கூட இந்த நாட்டை வளப்படுத்த வேண்டும்.





 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக