புதன், 4 பிப்ரவரி, 2015

நிகழ்வு:- 'சுதந்திர தினமும் நாமும்'
(தேசிய சுதந்திர தின விசேட சொற்பொழிவு)

இலங்கையின் 67 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை ஜமாஅதே இஸ்லாமி காத்தான்குடி மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'சுதந்திர தினமும் நாமும்' எனும் தலைப்பிலான விசேட சொற்பொழிவு 04-02-2015 இரவு இஷhத் தொழுகையின் பின் காத்தான்குடி-03 முகைதீன் மெத்தை பெரிய ஜூம்ஆ பள்ளிவாயலில் நடைபெற்றது. உரையினை தாழங்குடா தேசிய கல்வியியற் கல்லூரியின் விரிவுரையானர் அஸ்ஸெய்க் எம்.எல்.ஏ.வாஜித் (இஸ்லாஹி) M.A, M.Ed அவர்கள் நிகழ்த்தினார்கள்.
அவர்கள் தனதுரையில் முஸ்லிம்கள் இந்த நாட்டுக்கு ஆற்றிய பங்களிப்புக்கள் பற்றி எடுத்துக் கூறியதுடன் இந்த நாட்டு முஸ்லிம்கள் பெற்றிருந்த பாக்கியங்களுக்கு முக்கிய காரணம் இந்த நாட்டு மக்கள் இந்நாட்டு முஸ்லிம்கள் மீது வைத்திருந்த நல்லெண்ணமே என்பதையும் சுட்டிக் காட்டினார்கள்.