புதன், 13 ஏப்ரல், 2016

பலதார மணம் - ஒரு சமூக உளவியல் நோக்கு

பலதார மணத்தை இஸ்லாம் ஒருபோதும் வரவேற்கவில்லை. இஸ்லாம் உலகளாவிய சமயம் என்ற அடிப்படையில் பல்வேறு கால், சமூக வழக்காறுகளையும் தேவைகளையும் அனுசரித்து கடுமையான நிபந்தனையுடன் வழங்கப்பட்ட அனுமதி மட்டுமே அது. இஸ்லாம் ஒரு பெண்ணுடன் வாழ்வதையே வரவேற்கிறது. அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டு அவர்)கள் விஷயத்தில் நீதமாக நடக்கவியலாது என நீங்கள் அஞ்சினால், மற்றப் பெண்களில் உங்களுக்கு விருப்பமானவர்களை இரண்டிரண்டாகவோ மும்மூன்றாகவோ நான்குநான்காகவோ நீங்கள் திருமணம் புரிந்து கொள்ளலாம். (அவ்வாறு பலரைத் திருமணம் புரிந்தால் அப்போது அவர்களுக்கிடையில் நீங்கள் நீதமாக நடந்துகொள்ள வேண்டும். அவ்வாறு) நீங்கள் நீதமாக நடக்க முடியாது எனப் பயந்தால், ஒரு பெண்ணையே, அல்லது உங்கள் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் (அடிமைப்) பெண்ணையே (திருமணம் செய்து) கொள்ள வேண்டியது. நீங்கள் பேதம் பாராட்டாமலிருப்பதற்கு இதுவே சுலபமான முறையாகும். (திருக்குர்ஆன்: 4:3)