புதன், 16 நவம்பர், 2016

கல்வியின் இலக்கும் முஸ்லிம் சமூகமும்

சமநிலையான கல்வியின் மூலமே உயர் பண்பாடும் சமூக நீதியும் நிலைபெறக்கூடிய ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியும். கல்வியானது வணிகமயப்பட்டதாக மாற்றமடைந்தமையால் ஏராளமான சமூகப் பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறது. 'தொழிலுலகுக்கான கல்வி' எனும் விடயம் அதீதமாகப் பிரச்சாரம் செய்யப்பட்டமையும் ஓரளவு பிழையான தோற்றத்துடன் பிரச்சாரம் செய்யப்பட்டமையும் இதற்கான காரணிகளில் ஒன்று. வணிக நோக்குக் கொண்ட கல்வி நிறுவனங்கள் இதனை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டன.

வணிக மனப்பாங்கு கொண்ட முஸ்லிம் சமூகத்தில் இதன் தாக்கம் பயங்கரமானது. இவ்வாறு கல்விக்கு வணிக நோக்கம் கற்பிக்கப்பட்டமையால், முறைசார் கல்வியில் ஆண் பிள்ளைகளின் நாட்டம் வெகுவாகக் குறைந்தது.

புதன், 9 நவம்பர், 2016

கலவன் பாடசாலை ஒழுங்கும் முஸ்லிம் பாடசாலைகளும்.

ஒரு பால் பாடசாலைகள் (Single -Sex Schools) மற்றும் கலவன் பாடசாலைகள் (Mixed Schools) குறித்த கல்விப் புலத்திலான வாதப் பிரதிவாதங்கள் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஒரு பால் கல்வி மதப் பின்னணியுடன்தான் வலியுறுத்தப்படுகிறது என்பதும் தவறானது. ஐக்கிய அமெரிக்காவில் இயங்கிவரும் NASSPE (National Association for Single Sex Public Education) எனும் அமைப்பு இரு பாலாரும் தனித்தனியாகக் கற்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறது. உளவியல் மற்றும் சமூகவியல் ஆய்வுகளின் அடிப்படையிலேயே இந்த விடயத்தை அவர்கள் முன்வைக்கிறார்கள். ஆண் பிள்ளைகளினதும் பெண் பிள்ளைகளினதும் மூளையின் அமைப்பு மற்றும் கற்றல் ஒழுங்கு வேறுபடுவதால் இரு பாலாருக்குமான தனித்தன்மையான கற்பித்தல் நுட்பங்கள் பின்பற்றப்பட வேண்டும் என்பதே அங்கு முதன்மைப்படுத்தப்படுகிறது.