கல்வியின் இலக்கும் முஸ்லிம் சமூகமும்
சமநிலையான கல்வியின் மூலமே உயர் பண்பாடும் சமூக நீதியும் நிலைபெறக்கூடிய ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியும். கல்வியானது வணிகமயப்பட்டதாக மாற்றமடைந்தமையால் ஏராளமான சமூகப் பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறது. 'தொழிலுலகுக்கான கல்வி' எனும் விடயம் அதீதமாகப் பிரச்சாரம் செய்யப்பட்டமையும் ஓரளவு பிழையான தோற்றத்துடன் பிரச்சாரம் செய்யப்பட்டமையும் இதற்கான காரணிகளில் ஒன்று. வணிக நோக்குக் கொண்ட கல்வி நிறுவனங்கள் இதனை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டன.
வணிக மனப்பாங்கு கொண்ட முஸ்லிம் சமூகத்தில் இதன் தாக்கம் பயங்கரமானது. இவ்வாறு கல்விக்கு வணிக நோக்கம் கற்பிக்கப்பட்டமையால், முறைசார் கல்வியில் ஆண் பிள்ளைகளின் நாட்டம் வெகுவாகக் குறைந்தது.