ஜும்ஆ உரைகள்- பொறுப்புக்களும் நடைமுறைகளும்.
'டெங்கு நோய் ஏற்பட்டால், அதற்கு வைத்தியம் செய்ய மட்டும்தான் மருத்துவர்களுக்கு முடிகிறது. அது ஏன் ஏற்படுகிறது? எதனால் வருகிறது என்பவற்றை அவர்களால் கூற முடியவில்லை. எமக்கு முன்னுள்ள மக்கள் நுளம்புக் கடிக்குள்ளும் சாக்கடைகளுக்கு அருகிலும் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு இவ்வாறான நோய்கள் வந்ததில்லை. மனிதர்களின் கைகள் தேடிக் கொண்டவற்றின் (பாவங்களின்) விளைவு இது.' ஜூம்ஆப் பிரசங்கம் ஒன்றின்போது கதீப் ஒருவர் முன்வைத்த விடயங்கள் இவை. இக் கருத்துக்களில் உள்ள விகடங்களை சாதாரண பாடசாலை மாணவனாலேயே இனங்கண்டு கொள்ள முடியும்.
டெங்கு நோய்க்கான காரணம் மருத்துவ உலகில் தெளிவாக அறியப்பட்டிருக்கிறது. நோய்க் காரணியும் காவிகளும் இனங்காணப்பட்டிருக்கின்றன.