பள்ளிவாயல் நிருவாகிகளும் பொருளாதாரப் பின்னணியும்.
'ஸகாத் கொடுக்காதவர்கள், கொடுக்கத் தகுதியில்லாதவர்கள் பள்ளிவாயல் நிருவாகிகளாக இருக்க முடியுமா?' என்பது ஒரு சகோதரரின் முகப் புத்தகக் கேள்வி. 'நாம இன்னும் ஸகாத் கொடுக்கத் தகுதி ஆகல்ல. அதனால நாம பள்ளி நிருவாகி ஆக முடியாது' என்பது வேறொரு சகோதரரின் கூற்று. ஸகாத் கொடுக்கும் தகுதியிலுள்ள செல்வந்தர்கள் மட்டுமே பள்ளிவாயல் நிருவாகிகளாக இருக்க முடியும் எனும் கருத்து மேலெழுந்து வருவதை அவதானிக்க முடிகிறது.