சனி, 8 ஜூலை, 2017

காத்தான்குடி சிறுவர் புத்தகக்  கழகத்தின் சிறுவர் புத்தகக் கண்காட்சி


இன்றைய நிலையில் சிறுவர்களுக்கு மத்தியில் பரந்தளவிலான வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துதலென்பது பல்வேறு சவால்களைக் கொண்ட ஒரு முயற்சியாகும். பாடசாலைப் பாடப் புத்தகங்களோடு பெரும்பாலான சிறுவர்களின் வாசிப்பு சுருங்கிப் போகிறது. வணிக நோக்கிலான கல்வி நிறுவனங்கள் அவர்களைக் களைப்படைய வைத்துவிடுகின்றன. இவற்றையும் தாண்டிக் கிடைக்கின்ற ஓய்வு நேரங்களையும் இலத்திரனியல் ஊடகங்களும் மென்பொருள் விளையாட்டுக்களும் அபகரித்துக்கொள்கின்றன. இந்த நெருக்கடிகளுக்குள்ளால்தான் எமது எதிர்கால சந்ததியை, அறிவை முதல் நோக்காய்க் கொண்ட, எல்லையற்ற வாசிப்புலகை நோக்கி அழைத்துச் செல்ல வேண்டியிருக்கிறது. சிறுவர் இலக்கியங்களும் தனியான சிறுவர் வாசிகசாலைகளும் இந்த இடத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன.