செவ்வாய், 26 ஆகஸ்ட், 2025

பாடசாலைகளில் வழங்கப்படும் உடல்ரீதியான தண்டனைகளும்பாதகமான விளைவுகளும்

 

பிள்ளைகளின் ஒழுக்கமென்பது என்பது வெறுமனே பயத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்படு வதில்லை. அது, பரஸ்பர மரியாதை, புரிந்துகொள்ளுதல், நேர்மறையான தொடர்புகள் என்பவற்றின் அடிப்படையில் அமைய வேண்டும். உடல் ரீதியான தண்டனைகள் பிள்ளைகளின் உடல், உள ஆரோக்கியத்துக்குத் தீங்கு விளைவிப்பதுடன், சட்டவிரோதமானதும் ஆகும்.

கல்வி அமைச்சின் 2005/17 இலக்கமுடைய சுற்றறிக்கை மூலமும் இலங்கை தண்டனை சட்ட கோவையின் பிரகாரமும் (Penal Code Amendment Act No. 22 of 1995) சிறுவர் சாசனம் (Article 71 of the Children and Young Persons Ordinance) மூலமும் உடல் ரீதியான தண்டனைகளை வழங்குதல் தடைசெய்யப்பட்டுள்ளது. (Dr. கனகசபாபதி வாசுதேவா, 2021)