செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

பேராசிரியர் டாக்டர் அப்துல்லாஹ் - வாழ்வும் படிப்பினைகளும்

பேராசிரியர் டாக்டர் அப்துல்லாஹ் வாழ்வும் படிப்பினைகளும்
2013-08-19 அன்று காலை செவிகளை எட்டிய பேராசியர் டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) அவர்களின் மரணச் செய்தி உலகெங்கும் வாழும் தமிழ் பேசும் முஸ்லிம்களின் உள்ளங்களை ஒருகணம் அதிரவைத்தது. இஸலாமிய பிரச்சாரக் களத்துக்குக் கிடைத்த அறிவியல் வளமாகக் கருதப்பட்ட பேராசிரியர் அப்துல்லாஹ் அவர்களை குறுகிய காலத்திலேயே இஸ்லாமிய உலகம் இழந்துவிட்டது. இஸ்லாமியராக வாழ்ந்த ஓரிரு வருடங்களுக்குள் தான் ஏற்றுக்கொண்ட உத்தம வாழ்க்கை நெறிக்காக அவரால் ஆற்றப்பட்ட பணிகள் அளவிடற்கரியன. பிரக்ஞையுள்ள ஒவ்வொரு மனிதனும், அவரது வாழ்விலிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் அதிகமுள்ளன.

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

நிகழ்வு:- பெருநாள் ஒன்றுகூடல்

தேசிய கல்வி நிறுவகத்தின் மட்டக்களப்பு பிராந்திய கற்கை நிலையத்தில் கல்வி மானிப் பட்டப் படிப்பை மேற்கொள்ளும் மூன்றாம் வருட ஆசிரிய மாணவர்களின் ஏற்பாட்டிலான ஈதுல் பித்ர் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்வொன்று, 2013-08-18 காலை 11 மணியளவில் மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் நடைபெற்றது. மட்டக்களப்பு பிராந்திய கற்கை நிலையத்தின் இணைப்பாளரும் மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை அதிபருமான திரு எஸ்.யோகராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிராந்திய கற்கை நிலையத்தின் விரிவுரையாளர்களும் மூன்றாம் வருட ஆசிரிய பயிலுனர்களும் கலந்து சிறப்பித்தனர்.