நிகழ்வு: காங்கேயனோடை அல்-அக்ஸா மகா வித்தியாலய ஆக்கத்திறன் கண்காட்சி 2013
மட்/மம/காங்கேயனோடை அல்-அக்ஸா மகா வித்தியாலய ஆரம்பப் பிரிவு மாணவர்களின் 2013ம் ஆண்டுக்கான ஆக்கத்திறன் கண்காட்சி 26-10-2013 (1434-துல்'ஹஜ்-20) காலை 09:00 மணிக்கு வித்தியாலய ஆராதனை மண்டபத்தில் நடைபெற்றது. இக்கண்காட்சியில் பெருமளவான ஆக்கங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இடைநிலை வகுப்பு மாணவர்கள் சிலரும் கண்காட்சி ஒழுங்கமைப்பில் உதவி புரிந்திருந்தமையை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. பாடசாலை மட்டத்தில் நடைபெறும் இத்தகைய நிகழ்வுகள் மாணவர்களின் ஆக்கத் திறனை வளர்ப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. கண்காட்சி சிறப்புற ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. எனினும், கண்காட்சிக்கான கால இடைவெளி மிகக் குறுகியதாக இருந்தது என்பது குறிப்பிட்டுக் கூறவேண்டிய ஓர் குறைபாடாகும். இத்தகைய தரமிக்க கண்காட்சியை ஒழுங்குசெய்த ஆரம்பப் பிரிவு ஆசிரியர்களும் பங்களிப்புச் செய்த மாணவர்களும் பெற்றோர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.