திங்கள், 14 அக்டோபர், 2013

நிகழ்வு:- காங்கேயனோடை மட்/மம/அல்-அக்ஸா மகா வித்தியாலய ஆசிரியர் தின விழா

காங்கேயனோடை மட்/மம/அல்-அக்ஸா மகா வித்தியாலய ஆசிரியர்களைக் கௌரவிக்கும் வகையில் குறித்த பாடசாலையில் இருந்து 2011ம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆசிரியர் தின விழா 14-10-2013 அன்று காலை 10.00 மணியளவில் பாடசாலை ஆராதனை மண்டபத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் எம்.ஐ.எம்.அப்பாஸ் (நழீமி) அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி வலய இஸ்லாம் பாட ஆசிரிய ஆலோசகர் எம்.ஐ.அப்துல் கபூர் (மதனி), காத்தான்குடி போட்டக் கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் எஸ்.எம்.சுபைர், காங்கேயனோடை ஹிஸ்புல்லாஹ் வித்தியாலய அதிபர் ஜனாப் J.சித்திகீன், பாலமுனை அலிகார் வித்தியாலய அதிபர் ஜனாப் H.M.அப்துர் ரஸ்ஸாக், காங்கேயனோடை ஜாமிஉல் மஸ்ஜித் நிருவாக சபைத் தலைவர் மௌலவி ஆதம்லெப்பை (பஹ்ஜி) கிழக்குப் பல்கலைக் கழக விரிவுரையாளர் ஏ.எம.முஜாகித் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர்.

மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் ஆசிரியர்கள் பங்குபற்றிய வினோத நிகழ்ச்சிகளும் இந்நிகழ்வை அலங்கரித்தன. நிகழ்ச்சிகள் யாவும் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன. ஆசிரியர்கள் மாணவர்களின் கரங்களினாலேயே விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இப் பாடசாலையில் தற்போது உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களோடு வேறு பாடசாலைகளில் கல்வி பயிலும் பாடசாலையின் பழைய மாணவர்களும் இந்நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதில் தீவிரமாக உழைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகக்து. இவ்வாறான நிகழ்வுகளை மாணவர்களே பொறுப்பெடுத்து நடத்துவது அவர்களை தலைமைத்துவப் பண்பினை வளர்த்துக்கொள்வதற்கான மிகச் சிறந்த பயிற்சியாக அமையும் என்பதில் எதிர்க் கருத்துக் கிடையாது.













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக