ஞாயிறு, 29 டிசம்பர், 2013

உரை- அடையாளங்களை விட்டுச் செல்லும் பயனுள்ள வாழ்க்கைப் பயணம்

(காங்கேயனோடை அல்-அக்ஸா மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற 2013ம் ஆண்டுக்கான இறுதி மாணவர் மன்ற நிகழ்வில் ஆற்றப்பட்ட தலைமையுரை)

எதிர்காலத் தலைவர்களின் ஆற்றல்களை வளர்த்துக்கொள்ளும் பயிற்சிக் களமான இவ்வரங்கிற்கு வந்திருக்கும் உங்கள் அனைவரையும் வரவேற்பதில் இதன் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பவன் என்றவகையில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த அரங்கினைப் பயன்படுத்திக் கொள்ள நாம் அனைவரும் முயற்சி செய்ய வேண்டும்.

செவ்வாய், 3 டிசம்பர், 2013

நிகழ்வு – கண்காட்சியும் வயல் விழாவும்

மட்டக்களப்பு விவசாயத் திணைக்களத்தின் அனுசரணையுடன் காத்தான்குடி கமநல சேவைகள் நிலையத்தினால் செயற்படுத்தப்படும் பாடசாலை வீட்டுத்தோட்ட நிகழ்ச்சித் திட்டத்தின் ஓர் அங்கமாக கண்காட்சியும் வயல் விழாவும் 03-12-2013 (1435-01-29) காலை 10 மணியளவில் காத்தான்குடி மட்/மம/அந்-நாஸர் வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் இ.ரா.கரிகரன், மட்டக்களப்பு மத்தி வலய உதவி விவசாயப் பணிப்பாளர் செல்வி இ.சிவஞானம், பிரதேச செயலக திவிநெகும உத்தியோகத்தர் உட்பட பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.