செவ்வாய், 3 டிசம்பர், 2013

நிகழ்வு – கண்காட்சியும் வயல் விழாவும்

மட்டக்களப்பு விவசாயத் திணைக்களத்தின் அனுசரணையுடன் காத்தான்குடி கமநல சேவைகள் நிலையத்தினால் செயற்படுத்தப்படும் பாடசாலை வீட்டுத்தோட்ட நிகழ்ச்சித் திட்டத்தின் ஓர் அங்கமாக கண்காட்சியும் வயல் விழாவும் 03-12-2013 (1435-01-29) காலை 10 மணியளவில் காத்தான்குடி மட்/மம/அந்-நாஸர் வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் இ.ரா.கரிகரன், மட்டக்களப்பு மத்தி வலய உதவி விவசாயப் பணிப்பாளர் செல்வி இ.சிவஞானம், பிரதேச செயலக திவிநெகும உத்தியோகத்தர் உட்பட பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.

பாடசாலை மாணவர்களால் இதுவரை செய்கை பண்ணப்பட்ட வீட்டுத் திட்டப் பயிர்கள் இந்நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக