திங்கள், 21 ஏப்ரல், 2014

நிகழ்வு:- றிஸ்வி நகர், மஸ்ஜிதுஸ் ஸலாஹ் பள்ளிவாயல் திறப்பு விழா.

இலங்கை ஜமாஅதே இஸ்லாமி காத்தான்குடி மன்றத்தின் வேண்டுகோளின் பேரில் ஜமாஅத்தின் சமூக வேவைப் பிரிவான இனால் புதிய காத்தான்குடி றிஸ்வி நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மஸ்ஜிதுஸ் ஸலாஹ் பள்ளிவாயல் இன்று (21-04-2014) அஸர் தொழுகையுடன் திறந்துவைக்கப்பட்டது.

திங்கள், 14 ஏப்ரல், 2014

நிகழ்வு - இஸ்லாமிய உயர் கல்வி நிறுவனங்களுக்குச் செல்ல விரும்பும் மாணவர்களுக்கான வழிகாட்டற் கருத்தரங்கு

இலங்கை ஜமாஅதே இஸ்லாமி காத்தான்குடி மன்றத்தின் அனுசரணையுடன் காத்தான்குடி பிரதேச செயலக தொழில் உருவாக்கம் மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட, இஸ்லாமிய உயர் கல்வி நிறுவனங்களுக்குச் செல்ல விரும்பும் மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு இன்று (14-04-2014) காலை 9:00 மணி முதல் நண்பகல் 12:00 வரை காத்தான்குடி பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.