ஞாயிறு, 29 அக்டோபர், 2017

பள்ளிவாயல் நிருவாகத் தெரிவும் இரகசிய வாக்கெடுப்பு முறையும்


பள்ளிவாயல் நிருவாகத் தெரிவு தொடர்பாக, பாரம்பரிய முறையிலிருந்து வேறுபட்ட, தேர்தல் முறை அண்மைய நாட்களில் சில பள்ளிவாயல்களில் நடைமுறைப்படுகிறது. இந்த விடயம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்களும் எழுகின்றன. எவ்வாறான முறையொன்று நடைமுறைப்படுத்தப்பட்டபோதிலும் மஹல்லாவைச் சேர்ந்த ஜமாஅத்தார்களின் விருப்பினடிப்படையில் நிருவாகிகள் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதே அடிப்படை இலக்காகும். இன்றைய சூழ்நிலையில் பாரம்பரியத் தேர்வு முறையானது குறித்த இலக்கை நிறைவேற்றுவதற்கு எந்தளவுதூரம் வினைத்திறனானது என்பதே கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய முக்கிய விடயமாகும். சாதாரண ஒரு பொதுமகன் பகிரங்கமாக கருத்துத் தெரிவிக்க தயங்குகின்ற ஒரு சூழ்நிலை நிலவும்போதோ அல்லது பகிரங்கமாகத் தேர்வை நடத்தும்போது பிரச்சினைகள் எழுகின்ற நிலையிலோ இரகசிய வாக்கெடுப்பே பெரும்பான்மை அபிப்பிராயத்தைப் பெறுவதற்கு ஒப்பீட்டளவில் வினைத்திறனானதாகும். ஆனால், பள்ளிவாயலைப் பொறுத்தவரை இரகசிய வாக்கெடுப்பு என்பது தீண்டத் தகாத ஒரு பொறிமுறை என்ற கருத்து நிலவுகிறது.

சனி, 21 அக்டோபர், 2017

இலவசக் கல்வியும் டியூஷன் நிலையங்களும் - நடைமுறைகளைப் புரிந்துகொள்ளல்


அனைவருக்கும் சமமான கல்வி வாய்ப்புக்களை வழங்கும் வகையிலேயே இலங்கையில் இலவசக் கல்வி நடைமுறையிலுள்ளது.. ஆனால், இன்றைய டியூஷன் கலாச்சாரம் இலவசக் கல்வியின் பயனுறுதியை நலிவடையச் செய்துள்ளது என்பதை ஏற்றுத்தான் ஆகவேண்டும். இலாப நோக்குக் கொண்ட டியூஷன் நிலையங்கள் மாஃபியாவாக உருமாற்றம் பெற்று வருவதை அண்மைய பரீட்சைக் கால சம்பவங்கள் குறித்துக் காட்டுகின்றன. கல்வியானது போட்டி நிறைந்தாகவும் பரீட்சை மையமானதாகவும் அமைந்துள்ள நிலையில், இத்தகைய தனியார் கல்வி நிலையங்கள் அத்தியாவசியமானவை என உணர வைக்கப்படுகின்றன. அரசாங்கப் பாடசாலைகளில் ஆசிரியர்களின் கற்பித்தல் வினைத்திறனாக இல்லாதால், டியூஷன் அவசியமானது என்ற வாதம் முன்வைக்கப்படுகிற அதே வேளை, சில பாடசாலை ஆசிரியர்களின் அசிரத்தைக்கு டியூஷன் நிலையங்கள் காரணமாகின்றன. இதற்கு மேலதிகமாக, பெரும்பான்மையாக பாடசாலை ஆசிரியர்களே டியூஷன் வகுப்புக்களிலும், கற்பிக்கிறார்கள் என்பது இன்னும் வினோதமானது.