இலங்கையில் கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை, முறைசார் கல்வியின் அடிப்படைத் தகைமை ஒன்றினை வழங்கக்கூடிய, முக்கிய பொதுப் பரீட்சையாக நோக்கப்படுகிறது. பாரம்பரியமான பரீட்சை முறைகள் தொடர்பான எதிர்மறையான விமர்சனங்களை ஒருபுறம் வைத்துவிட்டாலும், எந்தவொரு கல்வி நடவடிக்கையும் மாணவர்களினை மையப்படுத்தியதாக அமைய வேண்டும் என்ற நவீன கல்விச் சிந்தனையினடிப்படையில், சாதாரணதரப் பரீட்சையும் மாணவர்களின் நலனை முதன்மைப்படுத்தியதாக அமைய வேண்டும். ஆனால், இன்று இப்பரீட்சையானது பாடசாலைகளின் கௌரவத்தினையும் கீர்த்தியையும் பறைசாற்றுவதற்கான கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். இதன் காரணமாக சில பாடசாலைகளாலும் ஆசிரியர்களாலும் மேற்கொள்ளப்படும் நேர்மையற்ற அறம் துறந்த நடவடிக்கைகள், பாடசாலைகளுக்குள்ளேயே சமூகப் படிநிலைகளை உருவாக்கி, ஒருசில பாடசாலைகளை விளிம்புநிலைக்குத் தள்ளி தீண்டத்தகாதவர்களின் பாடசாலைகளாக மாற்றியுள்ளன.
திங்கள், 29 மே, 2023
சனி, 13 மே, 2023
மட்/மம/அந்-நாஸர் வித்தியாலயத்தின் இன்றைய நிலையும் அதிபர் உரையும்
எமது சூழலில் பாடசாலை நிருவாகமானது, முழுமையான ஈடுபாட்டையும் அர்ப்பணிப்பையும் வேண்டி நிற்கின்றது. பாடசாலை நிருவாகத்தின் முக்கிய அங்கம் என்ற வகையில், அதிபரின் வகிபங்கு பாடசாலையொன்றில் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க செல்வாக்கினைக் கொண்டிருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. வளர்ச்சி கண்ட பல பாடசாலைகளின் வரலாற்றில் இவ்வுண்மை பொதிந்திருப்பதைக் காணலாம். இந்தவகையில், காத்தான்குடி மட்/மம/அந்-நாஸர் மகா வித்தியாலய அதிபரின் நேற்றைய (12.05.2023) உரையும் கரிசனைக்குரியது. அதிபர் பள்ளிவாயலில் உறுதிமொழி எடுத்ததும், தனது திட்டங்கள் தொடர்பாக வெளிப்படையாக பொதுவெளியில் முன்வைப்புச் செய்ததும் கவன ஈர்ப்பைப் பெறக்கத்தக்கன.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)