திங்கள், 30 ஜூன், 2014

 மனித உடல் எனும் அற்புதப் படைப்பு

 'அவன்தான் அல்லாஹ் உங்கள் இறைவன். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. எல்லாப் பொருட்களின் படைப்பாளனும் அவனே. ஆகவே, அவனையே வழிபடுங்கள். இன்னும் அவனே எல்லாக் காரியங்களையும் கண்காணிப்பவன்.' –அல்குர்ஆன் 6:102
இறைவனின் அற்புதப் படைப்பான மனித உடல் பற்றிய சில தகவல்கள் இதோ:

    மனித உடல் ட்ரில்லியன் கணக்கான கலங்களால் ஆனது. இவற்றில் ஏறத்தாழ 100 ட்ரில்லியன் (100,000,000,000,000) வரையான உயிருள்ள கலங்கள் காணப்படுகின்றன.
    மனித மூளையில் 100 பில்லியன் நரம்புக் கலங்கள் காணப்படுகின்றன. நரம்புக் கலங்களுக்கூடாக செய்திகள் (கணத்தாக்கம்) மணிக்கு 170 மைல் வேகத்தில் கடத்தப்படுகிறது.
    மனிதக் கண்ணின் விழித்திரையில் 137 மில்லியன் ஒளி உணர் கலங்கள் காணப்படுகின்றன. இவற்றில் 130 மில்லியன் கோல் கலங்களும் 7 மில்லியன் கூம்புக் கலங்களுமாகும். கூம்புக் கலங்களே நிறங்களை உணரக்கூடியன. ஒரு செக்கனில் 150 மில்லியன் துடிப்புகள் (pரடளந) கொண்ட செய்தி கண்ணிலிருந்து மின் சமிக்ஞைகளாக மூளைக்கு செல்கிறது.
    உலகிலுள்ள மிகச் சிறந்த குளிர்பதனாக்கும் தொகுதி (யுசை ஊழனெவைழைniபெ ளுலளவநஅ) மூக்காகும். நுரையீரலுக்குச் செல்லும் காற்றின் வெப்பநிலையை சீர்செய்வதோடு வடிகட்டும் தொழிலையும் செய்கிறது.
    3000 வரையான பொருட்களின் வாசனையைப் பிரித்தறியும் ஆற்றல் மனித மூக்கிற்கு உண்டு.
    நுரையீரலில் 300 மில்லியன் வரையான காற்றுச் சிற்றறைகள் உள்ளன. இவற்றை விரித்தால் ஒரு சிறிய மைதானத்தின் பரப்புக்குச் சமனாக வரும்.
    சுவாசப் பாதையினுள் உணவோ திரவங்களோ சென்றால், இருமல் ஏற்படும். இருமும்போது மணிக்கு 960 கிலோமீற்றர் வேகத்தில் வளி வெளியேற்றப்பட்டு சுவாசப் பாதையுள் சென்ற பொருட்கள் வெளியேற்றப்படும்.
    ஒரு நாளில் மனிதன் 24,000 தடவை சுவாசிக்கிறான்.
    60-70 வயது வரை வாழும் ஒரு மனிதனின் வாழ்நாளில், அவரது இதயம் 3000 மில்லியன் தடவை துடிக்கிறது. தாயின் வயிற்றில் கருவாக இருக்கும்போதே துடிக்க ஆரம்பிக்கும் இதயம், மரணத்தின்போதுதான் ஓய்வெடுக்கிறது.
    ஒவ்வொரு நாளும் குருதியானது 60,000 மைல் பயணம் செய்கிறது.
    நான்கு அங்குலம் மட்டுமே நீளமான மனித சிறுநீரகத்தில்  1,200,000 வரையான சிறுநீரகத்திகள் எனும் நுண்குழரய் போன்ற வடிகட்டும் அமைப்புக்கள் உள்ளன. இந்நுண்குழாய்களை ஒன்றுடன் ஒன்று இணைத்து நீட்டினால், 31 கிலேமீற்றர் வரை செல்லும்.
    ஒரு துளிக் குருதியில் 250 மில்லியன் செங்குருதிக் கலங்கள் உள்ளன. செங்குருத்pக் கலங்களின் ஆயுள் 120 நாட்களாகும். ஒரு நாளைக்கு 200 பில்லியன் செங்குருதிக் கலங்கள் புதிதாக உருவாக்கப்படுகின்றன.
    உணவுக் கால்வாயின் மொத்த நீளம் 27 அடியாகும்.
    சிறுகுடற் சுவரில் மில்லியன் கணக்கான சடைமுளைகள் காணப்படுகின்றன. அதேபோன்று, மில்லியன் கணக்கான சமிபாட்டுச் சுரப்பிகளும் காணப்படுகின்றன. இச்சுரப்பிகளால் ஒவ்வொரு நாளும் 2.1 லீற்றர் குடற்சாறு சுரக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக