புதன், 20 நவம்பர், 2013

அறிவு பூர்வமாக உங்களது மழலைகளை பயிற்றுவிக்க விரும்புகிறீர்களா ?

தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது மத்ரஸது தாருல் ஹஸனாத் குர்ஆன் பாடசாலை. குழந்தைகளின் உளவியலுக்கு ஏற்ற கவர்ச்சிகரமான நவீன கற்பித்தல் உத்திகளுடன் அல்-குர்ஆனைக் கற்பதற்கான வாய்ப்பு 5 வயது முதல்  ஓதி முடிக்கும் வரையான சிறந்த பாடத்திட்டம்.  நல்லொழுக்கமும் சமனிலை ஆழுமையும் கொண்ட இஸ்லாத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் நற் பிரஜையாக உங்கள் குழந்தைகளும் மாற வேண்டுமா? ஆரம்ப பாடத்துக்கான அறிமுகம் கீழே தரப்பட்டுள்ளது.

சனி, 16 நவம்பர், 2013

நிகழ்வு-கல்வி மானி முதலாம் வருட மாணவர்களை வரவேற்றல்

தேசிய கல்வி நிறுவகத்தின் மட்டக்களப்பு பிராந்திய கற்கை நிலையத்தில் இம்முறை கல்வி மானி பட்டக் கற்கை நெறியினைப் பயில்வதற்காகத் தெரிவாகியுள்ள முதலாம் வருட ஆசிரிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் திசைமுகப்படுத்தும் நிகழ்வும் 16-11-2013 காலை 10 மணியளவில் மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில்  பிராந்தியக் கற்கை நிலையத்தின் இணைப்பாளரும் மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை அதிபருமான திரு. எஸ். யோகராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. குறித்த கற்கை நிலையத்தில் கல்வி மானிப் பட்டக் கற்கை நெறியினைத் தொடரும் இரண்டாம், மூன்றாம் வருட ஆசிரிய மாணவர்களின் அனுசரணையுடன் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

புகைப்பட உதவி:- ஜனாப் ஏ.எல்.அப்துல் அஸீஸ் (மூன்றாம் வருட ஆசிரிய மாணவர்)

புதன், 13 நவம்பர், 2013

ஆசூறா - அடிமைத் தளையில் இருந்து விடுதலை

உலக அதிசயமாகத் திகழும் பிரமிட்டுக்களின் பின்னால் ஒழிந்திருக்கும் சோக வரலாறு அனேகமானோர் அறிந்ததே. மனிதனின் அடிமைத்துவ வரலாற்றின் இன்னொரு பக்கமே, ஓங்கி உயர்ந்து நிற்கும் இந்தக் கல்லறைகளாகும். வாழும்போது ஆடம்பரமாக வாழ்ந்த ஆதிக்க சமூகம் ஒன்று, மரணித்த பின்னரும் ஆடம்பரமாக வாழ வேண்டும் என்ற அற்பத்தனமான பேராசையின் அடித்தளத்தில் உருவாக்கப்பட்டவையே இந்த அதிசயக் கட்டடங்களாகும்.

இவ்வாறான ஆதிக்க வெறியின் போதையில் மயங்கிக் கிடந்த, எகிப்திய ஆதிக்க சக்திகளிடம் அடிமைப்பட்டு நசுக்கப்பட்ட சமூகமே இஸ்ரேலிய சமூகமாகும். வாழ முடியாமல் மூச்சுத் திணறிக்கொண்டிருந்த அந்த சமூகத்திற்கு, மூஸா (அலை) எனும் அற்புத மனிதரின் மூலம், இறைவன் விடுதலை கொடுத்தான். அந்த அற்புத வரலாற்றின் நினைவு தினமே ஆசூறா.

செவ்வாய், 5 நவம்பர், 2013

இஸ்லாமியப் புதுவருடமும் இஸ்லாமிய நாட்காட்டியும்

மற்றுமொரு இஸ்லாமியப் புதுவருடம் மலர்ந்துள்ளது. இஸ்லாமிய வரலாற்றில் முக்கியமான அரசியல் சமூக மாற்றத்திற்கு வித்திட்ட உன்னதமான ஹிஜ்ரா நிகழ்வின் வயதினை அது எடுத்துக் கூறுகிறது. புதிய திட்டங்களுடனும் தியாக உணர்வுடனும் மறுமலர்ச்சிச் சிந்தனைகளுடனும் சமூகம் வழிநடத்திச் செல்லப்படவேண்டியதன் தேவையை புதிய வருடப் பிறப்பு உணர்த்தி நிற்கிறது.

உலகம் முழுவதும் பல்வேறு ஆண்டுக் கணிப்பு முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இவற்றுள் பெரும்பாலானவை சமயம் சார்ந்தவையாகவே காணப்படுகின்றன. சமய நம்பிக்கையற்றோர்கூட சமயச் சார்பாக உருவாக்கப்பட்டுள்ள ஆண்டுக் கணிப்பீட்டு முறைகளில் தங்கியிருக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகிறது.