புதன், 16 நவம்பர், 2016

கல்வியின் இலக்கும் முஸ்லிம் சமூகமும்

சமநிலையான கல்வியின் மூலமே உயர் பண்பாடும் சமூக நீதியும் நிலைபெறக்கூடிய ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியும். கல்வியானது வணிகமயப்பட்டதாக மாற்றமடைந்தமையால் ஏராளமான சமூகப் பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறது. 'தொழிலுலகுக்கான கல்வி' எனும் விடயம் அதீதமாகப் பிரச்சாரம் செய்யப்பட்டமையும் ஓரளவு பிழையான தோற்றத்துடன் பிரச்சாரம் செய்யப்பட்டமையும் இதற்கான காரணிகளில் ஒன்று. வணிக நோக்குக் கொண்ட கல்வி நிறுவனங்கள் இதனை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டன.

வணிக மனப்பாங்கு கொண்ட முஸ்லிம் சமூகத்தில் இதன் தாக்கம் பயங்கரமானது. இவ்வாறு கல்விக்கு வணிக நோக்கம் கற்பிக்கப்பட்டமையால், முறைசார் கல்வியில் ஆண் பிள்ளைகளின் நாட்டம் வெகுவாகக் குறைந்தது.

புதன், 9 நவம்பர், 2016

கலவன் பாடசாலை ஒழுங்கும் முஸ்லிம் பாடசாலைகளும்.

ஒரு பால் பாடசாலைகள் (Single -Sex Schools) மற்றும் கலவன் பாடசாலைகள் (Mixed Schools) குறித்த கல்விப் புலத்திலான வாதப் பிரதிவாதங்கள் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஒரு பால் கல்வி மதப் பின்னணியுடன்தான் வலியுறுத்தப்படுகிறது என்பதும் தவறானது. ஐக்கிய அமெரிக்காவில் இயங்கிவரும் NASSPE (National Association for Single Sex Public Education) எனும் அமைப்பு இரு பாலாரும் தனித்தனியாகக் கற்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறது. உளவியல் மற்றும் சமூகவியல் ஆய்வுகளின் அடிப்படையிலேயே இந்த விடயத்தை அவர்கள் முன்வைக்கிறார்கள். ஆண் பிள்ளைகளினதும் பெண் பிள்ளைகளினதும் மூளையின் அமைப்பு மற்றும் கற்றல் ஒழுங்கு வேறுபடுவதால் இரு பாலாருக்குமான தனித்தன்மையான கற்பித்தல் நுட்பங்கள் பின்பற்றப்பட வேண்டும் என்பதே அங்கு முதன்மைப்படுத்தப்படுகிறது.

புதன், 3 ஆகஸ்ட், 2016

தேசிய சுஹதாக்கள் தின நிகழ்வுகள் - 2016

26வது தேசிய சுஹதாக்கள் தின நிகழ்வுகள் இன்று (03.08.2016) காலை காத்தான்குடி-01 மீரா  பெரிய ஜும்ஆ மஸ்ஜிதில் நடைபெற்றன. சுஹதாக்கள் தின விசேட சொற்பொழிவு, பள்ளிவாயலின் பேஷ இமாம்களுள் ஒருவரான, மௌலவி அல்-ஹாபிழ் ஏ.ஏ.அப்துர் ரஹ்மான் முப்தி அவர்களால் நிகழ்த்தப்பட்டது. கத்தமுல் குர்ஆன், துஆ பிரார்த்தனை நிகழ்வுகளும் இடம்பெற்றன. 1990.08.03 அன்று காத்தான்குடி மஸ்ஜிதுல் மீரா பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல் மற்றும் ஹுஸைனியா பள்ளிவாயல் ஆகியவற்றில் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் தமிழ் ஆயுததாரிகளால் கொலைசெய்யப்பட்ட நிகழ்வினை அடையாளப்படுத்தும் வகையிலும் அக்காலப்பகுதியில் ஏனைய முஸ்லிம் இனப் படுகொலைகளை நினைவுகூருமுகமாகவும் இத்தினம் வருடாவருடம் அனுஷ;டிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 31 ஜூலை, 2016


பாடசாலைகளில் வழங்கப்படும் உடல் ரீதியான தண்டனைகளும் ஒழுக்க உருவாக்கமும்.

பாடசாலைகளில் வழங்கப்படும் உடல் ரீதியான தண்டனைகள் குறித்த எமது சிந்தனைகளில் இன்னும் மாற்றம் ஏற்படவில்லை. கடுமையான உடல் ரீதியான தண்டனைகளின் மூலம் ஒரு பிள்ளையில் ஒழுக்கத்தை ஏற்படுத்திவிட முடியும் என்ற கருத்திலிருந்து நாம் இன்னும் விடுபடத் தயாராக ' சகல வகையான இம்மைகள் புறக்கணிப்பிலிருந்தும் பாதுகாப்புப் பெறும் உரிமை பிள்ளைகளுக்கு உண்டு. பிள்ளைகளைத் துன்புறுத்த பெற்றோருக்கோ பிற பராமரிப்பாளர்களுக்கோ உரிமை இல்லை.இது தொடர்பான தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொறுப்பு அரசினுடையதாகும்.' ஏன ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமை சமவாயம்- உறுப்புரை 19 தெரிவிக்கின்றது. 

புதன், 13 ஏப்ரல், 2016

பலதார மணம் - ஒரு சமூக உளவியல் நோக்கு

பலதார மணத்தை இஸ்லாம் ஒருபோதும் வரவேற்கவில்லை. இஸ்லாம் உலகளாவிய சமயம் என்ற அடிப்படையில் பல்வேறு கால், சமூக வழக்காறுகளையும் தேவைகளையும் அனுசரித்து கடுமையான நிபந்தனையுடன் வழங்கப்பட்ட அனுமதி மட்டுமே அது. இஸ்லாம் ஒரு பெண்ணுடன் வாழ்வதையே வரவேற்கிறது. அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டு அவர்)கள் விஷயத்தில் நீதமாக நடக்கவியலாது என நீங்கள் அஞ்சினால், மற்றப் பெண்களில் உங்களுக்கு விருப்பமானவர்களை இரண்டிரண்டாகவோ மும்மூன்றாகவோ நான்குநான்காகவோ நீங்கள் திருமணம் புரிந்து கொள்ளலாம். (அவ்வாறு பலரைத் திருமணம் புரிந்தால் அப்போது அவர்களுக்கிடையில் நீங்கள் நீதமாக நடந்துகொள்ள வேண்டும். அவ்வாறு) நீங்கள் நீதமாக நடக்க முடியாது எனப் பயந்தால், ஒரு பெண்ணையே, அல்லது உங்கள் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் (அடிமைப்) பெண்ணையே (திருமணம் செய்து) கொள்ள வேண்டியது. நீங்கள் பேதம் பாராட்டாமலிருப்பதற்கு இதுவே சுலபமான முறையாகும். (திருக்குர்ஆன்: 4:3)

வியாழன், 4 பிப்ரவரி, 2016

இலங்கையின் 68வது சுதந்திர தினமும் மறுசீரமைக்கப்பட வேண்டிய எமது வாழ்வொழுங்கும்.

ஓவ்வொரு மனிதனும் சுதந்திர உணர்வுடன் பிறந்துள்ளான். நிர்ப்பந்தம், பலவீனம் என்பவற்றின் காரணமாகவே அவன் பிறருக்கு அடிமைப்படும் நிலை ஏற்படுகிறது. இருந்தபோதிலும், மனிதனின் இயல்பான சுதந்திர உணர்வு அனைத்து அடிமைத் தளைகளில் இருந்தும் விடுதலை பெறும் போராட்டத்தின்பால் அவனை உந்தித் தள்ளுகிறது. எமது தாய்நாடான இலங்கை காலணித்துவ அடிமைத் தளைகளிலிருந்து விடுதலை பெற்ற 68வது ஆண்டு நிறைவினை இன்று கொண்டாடிக்கொண்டிருக்கிறது. இனம், மதம் போன்ற எல்லைக் கோடுகளைத் தாண்டி, 'தேசம்' எனும் ஒற்றைக் கொடியின் கீழ் ஒன்றுபட்டு சிந்திக்கும் தருணமாக இன்றைய தினம் அடையாளப்படுத்தப்படுகிறது.