வியாழன், 28 மார்ச், 2013

நிகழ்வு-ஹலால் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

மட்/மம/காங்கேயனோடை அல்-அக்ஸா மகா வித்தியாலய ஆசிரியர்களுக்கான ஹலால் விழிப்புணர்வுக் கருத்தரங்கு 28-03-2013 அன்று மு.ப 11.00 மணியளவில் பாடசாலை நூலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் அஷ;ஸெய்க் எம்.ஐ.எம்.அப்பாஸ் (நளீமி), உயர்தர இஸ்லாம் பாட ஆசிரியரான மௌலவி ஏ.ஜே.அஸ்ரப் (பலாஹி), எம்.ஏ.சீ.எம்.ஜஹானி ஆகியோர் விளக்கவுரைகளை நிகழ்த்தினர்.

செவ்வாய், 26 மார்ச், 2013

சமூக, சமயவியல் நோக்கில்-ஹலால் உணவுகள்

இன்றைய சூழலில் ஹலால் பற்றிய கருத்துப் பரிமாறல்கள் தீவிரமடைந்துள்ளதைக் காணலாம். ஹலால் பற்றிய புரிந்துணர்வின்மை அண்மைக் காலத்தில் பாரிய முரண்பாடுகளைத் தோற்றுவித்துள்ளமையினையும் அவதானிக்க முடியும். 'ஹலால்' எனும் அறபு வார்த்தையானது, 'அனுமதிக்கப்பட்டது' எனும் பொருளைத் தரும். இதனோடு இணைந்ததாக ஹலால் என்பதன் எதிர்க் கருத்தைத் தரும் சொல்லான 'ஹறாம்' என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். 'ஹறாம்' எனும் அறபு வார்த்தை 'தடைசெய்யப்பட்டது' எனும் பொருளில் பயன்படுத்தப்படுகிறது

ஞாயிறு, 24 மார்ச், 2013

நிகழ்வு- சமயங்களுக்கூடாக விழுமியக் கல்வி (பல்சமயக் கருத்தரங்கு)

தேசியக் ப்கல்வி நிறுவகத்தினால் நடத்தப்படும் கல்விமானி பட்ட பாடநெறியை மட்டக்களப்பு கற்கை நிலையத்தில் தொடரும் 3ம் வருட ஆசிரிய மாணவர்களுக்கான 'சமயங்களுக்கூடாக விழுமியக் கல்வி' எனும் தலைப்பிலான பல்சமயக் கருத்தரங்கு, 24-03-2013 அன்று காலை 9:00 மணிக்கு மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை ஆராதனை மண்டபத்தில் பாடநெறி இணைப்பாளரும் அரசினர் ஆசிரியர் கலாசாலை அதிபருமான திரு ஏ.எஸ்.யோகராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. கற்கை நிலைய 3ம் வருட மாணவர், எஸ்.சுதாகரன் அவர்களின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந் நிகழ்வானது மும்மதப் இறை வணக்கங்களுடன் ஆரம்பமானது.

திங்கள், 18 மார்ச், 2013

ஹலால் விவகாரமும் நாம் பெறவேண்டிய படிப்பினைகளும்

(தானகச்) செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாததின் பெயர் அதன் மீது கூறப்பட்ட (அறுக்கப்பட்;ட)தும், கழுத்து நெரித்துச் செத்ததும், அடிபட்டுச் செத்ததும், கீNழு விழுந்து செத்ததும், கொம்பால் முட்டப் பட்டுச் செத்ததும், விலங்குகள் கடித்(துச் செத்)தவையும் உங்கள் மீது ஹராமாக்கப் பட்டிருக்கின்றன. (அனுமதிக்கப்பட்டவற்றில்) எதை நீங்கள் (உயிரோடு பார்த்து, முறைப்படி) அறுத்தீர்களோ அதைத் தவிர (அதை உண்ணலாம்.

நபி(ஸல்) அவர்களின் இறுதிப் பேருரை

நிச்சயமாக, எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அவனையே நாம் புகழ்கிறோம். அவனிடமே நாம் பாதுகாப்புத் தேடுகிறோம். நம்முடைய மனோ இச்சைகளின் தீங்குகளை விட்டும்; அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறோம். அல்லாஹ் நேர்வழி காட்டியவரை வழிகெடுப்பவர் யாருமில்லை. அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிட்டவரை நேர்வழியில் செலுத்துபவரும் யாருமில்லை. அல்லாஹ்வைத் தவிர கடவுள் இல்லையென்றும் அவன் தனித்தவன் எனவும் அவனுக்கு இணையாக யாருமில்லையெனவும் நான் சாட்சி சொல்கிறேன். இன்னும், முஹம்மது(ஸல்) அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார் எனவும் சாட்சி சொல்கிறேன்.

குர்ஆன் பேசுகிறது

-மௌலவி ஏ.ஜே.அஸ்ரப் பலாஹி

 எனது பெயர்    :-         குர்ஆன், நூர், தன்ஸீல், புர்கான் 
எனது மொழி    :-        அறபு
முதலில் இருந்த இடம் :-    லவ்ஹூல் மஹ்பூல்

பின்னர் இறக்கப்பட்ட இடம் :-    பைதுல் இஸ்ஸா (முதலாம் வானம்)

இந்த பூமிக்கு வருகை     :-    நபி (ஸல்) அவர்களின் 40ம் வயதில் ஹிறா குகையில்
இருக்கும்போது