திங்கள், 18 மார்ச், 2013

குர்ஆன் பேசுகிறது

-மௌலவி ஏ.ஜே.அஸ்ரப் பலாஹி

 எனது பெயர்    :-         குர்ஆன், நூர், தன்ஸீல், புர்கான் 
எனது மொழி    :-        அறபு
முதலில் இருந்த இடம் :-    லவ்ஹூல் மஹ்பூல்

பின்னர் இறக்கப்பட்ட இடம் :-    பைதுல் இஸ்ஸா (முதலாம் வானம்)

இந்த பூமிக்கு வருகை     :-    நபி (ஸல்) அவர்களின் 40ம் வயதில் ஹிறா குகையில்
இருக்கும்போது


இறங்கிய காலம் :-        23 வருடங்கள்

பாதுகாக்கப்பட்ட முறைகள் :-    மனனம் (ஹாபிழ்)
                எழுதுதல் (குத்தாபுல் வஹி)
                செயற்படுத்துதல் (அமல் செய்தல்)

என்னை நூலுருப்படுத்தியவர்:-    அபூபக்கர் (றழி)
                ஸைத் இப்னு தாபித் தலைமையிலான குழு

நூலுருப்படுத்த தூண்டியவர்:-    உமர் (றழி)

அதற்கான காரணம் :-        யமாமா யுத்தத்தில் 70க்கு மேற்பட்ட ஹாபிழ்கள் கொலை
                செய்யப்பட்டமை.

ஒரே அமைப்பில் வெளியிட்டவர் :-    உதுமான் (றழி)
                    ஜாமிஉல் குர்ஆன்

அதற்கான காரணம் :-        ஆர்மோனியா போரில் என்னைத் தவறாக ஓதியதை,
ஹூதைபதுல் யமானி அவதானித்தார்.
அறபி அல்லாதவர்களும் இஸ்லாத்தில் வந்தமை.

ஏன்னுடைய அமைப்பு :-    வசனங்கள் - 6666
                ஸூறாக்கள் - 114
                ஜுஸ்உ - 30
                மன்ஸில் - 07
                மக்கி ஸூறாக்கள் - 86
                மதனி ஸூறாக்கள் - 28
                சஜதாக்கள் - 14ஃ15

பெரிய ஸூறா :-        ஸூறதுல் பகரா
சிறிய ஸூறா :-        ஸூறதுல் கவ்தர்
கல்புல் குர்ஆன்:-        ஸூறா யாஸீன்
உம்முல் குர்ஆன் :-        ஸூறதுல் பாத்திஹா
முதலில் இறங்கிய ஸூறா :-    ஸூறதுல் அலக்
பிஸ்மி இல்லாத ஸூறா :-    ஸூறது தௌபா
இரண்டு பிஸ்மி உள்ள ஸூறா :-ஸூறது நம்ல்
என்னுடைய சிறப்புக்கள் :-    இறுதி வேதம்.
                நிரந்தரமான அற்புதம்.
                முந்திய வேதங்கள் என்னால் மாற்றப்பட்டன.
                ஏன்னைப் போன்று ஒன்றை உருவாக்க முடியாது.

என்னை ஓதுபவருக்கான நன்மைகள்:-        உள்ளம் நிம்மதி அடையும்.
                        ஓர் எழுத்துக்கு பத்து நன்மை
                        மறுமையில் என் சிபாரிசு கிடைக்கும்.
                        (இன்னும் பல.......)

எனக்கு செய்ய வேண்டிய கடமைகள்:-    ஓதுதல், மனனம் செய்தல், பின்பற்றுதல்,
எத்தி வைத்தல்.

இன்று என்னுடைய நிலை :-    சென்ற காலங்களில் இரவில் என்னை ஓதுவார்கள். இன்று
நாடகத்தைப் பார்க்கின்றார்கள்.
வீடுகளில் புழுதி பிடித்து வைக்கப்பட்டுள்ளேன்.
மரணித்தால் மாத்திரம் ஓதப்படுகின்றேன்.
பள்ளிவாசல்களில் அழகிற்காக அடுக்கப்பட்டுள்ளேன்.

உங்களிடம் சில கேள்விகள்:- மாதத்தில் ஒரு தரம் முழுமையாக ஓதினீர்களா?
                அல்லது உங்கள் வாழ்க்கையில்தான் ஒரு தரம் முழுமையாக
ஓதி முடித்தீர்களா?
ஓவ்வொரு நாளும் என்னுடைய குறிப்பிட்ட பக்கங்களாவது
ஓதுகின்றீர்களா?

எனது வேண்டுகோள் :-    பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுங்கள்.
                வீடுகளில் தினமும் ஓதுங்கள், மனனம் செய்யுங்கள்.
                என்னைப் பின்பற்றி மறுமையில் என் சிபாரிசைப் பெற்று சுவனம்
செல்லுங்கள்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக