செவ்வாய், 21 நவம்பர், 2017

டார்வினின் கொள்கையும் கடவுள் நம்பிக்கையும் - முரண்பாடுகளின் உண்மை நிலை


இரண்டு நாட்களுக்கு முன்னால் டார்வினின் பரிணாமக் கொள்கை தொடர்பான கட்டுரையொன்றினை முகநூலில் வாசிக்கக் கிடைத்தது. பரிணாமக் கோட்பாடு கடவுளை மறுப்பதற்கு உதவுவதால் அதனை பலரும் ஏற்றிப் போற்றுவதாகவும் அது விஞ்ஞான ரீதியாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் புறத்தோற்ற அவதானிப்புகளை மட்டும் வைத்தே இன்றும் கூர்ப்பு முன்வைக்கப்படுவதாகவும் உடற்கூற்றியலையோ மூலக்கூற்று உயிரியலையோ கருத்திற் கொள்வதில்லை எனவும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது. 'ஒட்டகச் சிவிங்கியின் கழுத்து எவ்வாறு நீண்டது' என்பதற்கு லாமார்க் கூறிய விளக்கத்தை டார்வினிஸ்டுகளின் கருத்தாகவும் அதே பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது. 
பெரும்பாலும் மதம் சார்பாக பரிணாமக் கொள்கை எதிர்க்கப்படும்போது, குறிப்பாக முஸ்லிம் சமூகத்தினுள் இருந்து இந்த எதிர்ப்பு முன்வைக்கப்படும்போது, இவ்வாறான மிக மங்கலான ஒரு பார்வையினை அவதானிக்க முடிகிறது. இதற்கு அப்பால், டார்வினின் கொள்கையை கடவுள் மறுப்புக்கான கருவியாகக் கையாள முனையும் நாத்திகர்கள் சிலரும் ஓரளவு இதனையொத்த பார்வையைக் கொண்டிருக்கிறார்கள் என்பது வேறொரு அவதானம். 

ஞாயிறு, 29 அக்டோபர், 2017

பள்ளிவாயல் நிருவாகத் தெரிவும் இரகசிய வாக்கெடுப்பு முறையும்


பள்ளிவாயல் நிருவாகத் தெரிவு தொடர்பாக, பாரம்பரிய முறையிலிருந்து வேறுபட்ட, தேர்தல் முறை அண்மைய நாட்களில் சில பள்ளிவாயல்களில் நடைமுறைப்படுகிறது. இந்த விடயம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்களும் எழுகின்றன. எவ்வாறான முறையொன்று நடைமுறைப்படுத்தப்பட்டபோதிலும் மஹல்லாவைச் சேர்ந்த ஜமாஅத்தார்களின் விருப்பினடிப்படையில் நிருவாகிகள் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதே அடிப்படை இலக்காகும். இன்றைய சூழ்நிலையில் பாரம்பரியத் தேர்வு முறையானது குறித்த இலக்கை நிறைவேற்றுவதற்கு எந்தளவுதூரம் வினைத்திறனானது என்பதே கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய முக்கிய விடயமாகும். சாதாரண ஒரு பொதுமகன் பகிரங்கமாக கருத்துத் தெரிவிக்க தயங்குகின்ற ஒரு சூழ்நிலை நிலவும்போதோ அல்லது பகிரங்கமாகத் தேர்வை நடத்தும்போது பிரச்சினைகள் எழுகின்ற நிலையிலோ இரகசிய வாக்கெடுப்பே பெரும்பான்மை அபிப்பிராயத்தைப் பெறுவதற்கு ஒப்பீட்டளவில் வினைத்திறனானதாகும். ஆனால், பள்ளிவாயலைப் பொறுத்தவரை இரகசிய வாக்கெடுப்பு என்பது தீண்டத் தகாத ஒரு பொறிமுறை என்ற கருத்து நிலவுகிறது.

சனி, 21 அக்டோபர், 2017

இலவசக் கல்வியும் டியூஷன் நிலையங்களும் - நடைமுறைகளைப் புரிந்துகொள்ளல்


அனைவருக்கும் சமமான கல்வி வாய்ப்புக்களை வழங்கும் வகையிலேயே இலங்கையில் இலவசக் கல்வி நடைமுறையிலுள்ளது.. ஆனால், இன்றைய டியூஷன் கலாச்சாரம் இலவசக் கல்வியின் பயனுறுதியை நலிவடையச் செய்துள்ளது என்பதை ஏற்றுத்தான் ஆகவேண்டும். இலாப நோக்குக் கொண்ட டியூஷன் நிலையங்கள் மாஃபியாவாக உருமாற்றம் பெற்று வருவதை அண்மைய பரீட்சைக் கால சம்பவங்கள் குறித்துக் காட்டுகின்றன. கல்வியானது போட்டி நிறைந்தாகவும் பரீட்சை மையமானதாகவும் அமைந்துள்ள நிலையில், இத்தகைய தனியார் கல்வி நிலையங்கள் அத்தியாவசியமானவை என உணர வைக்கப்படுகின்றன. அரசாங்கப் பாடசாலைகளில் ஆசிரியர்களின் கற்பித்தல் வினைத்திறனாக இல்லாதால், டியூஷன் அவசியமானது என்ற வாதம் முன்வைக்கப்படுகிற அதே வேளை, சில பாடசாலை ஆசிரியர்களின் அசிரத்தைக்கு டியூஷன் நிலையங்கள் காரணமாகின்றன. இதற்கு மேலதிகமாக, பெரும்பான்மையாக பாடசாலை ஆசிரியர்களே டியூஷன் வகுப்புக்களிலும், கற்பிக்கிறார்கள் என்பது இன்னும் வினோதமானது.

சனி, 8 ஜூலை, 2017

காத்தான்குடி சிறுவர் புத்தகக்  கழகத்தின் சிறுவர் புத்தகக் கண்காட்சி


இன்றைய நிலையில் சிறுவர்களுக்கு மத்தியில் பரந்தளவிலான வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துதலென்பது பல்வேறு சவால்களைக் கொண்ட ஒரு முயற்சியாகும். பாடசாலைப் பாடப் புத்தகங்களோடு பெரும்பாலான சிறுவர்களின் வாசிப்பு சுருங்கிப் போகிறது. வணிக நோக்கிலான கல்வி நிறுவனங்கள் அவர்களைக் களைப்படைய வைத்துவிடுகின்றன. இவற்றையும் தாண்டிக் கிடைக்கின்ற ஓய்வு நேரங்களையும் இலத்திரனியல் ஊடகங்களும் மென்பொருள் விளையாட்டுக்களும் அபகரித்துக்கொள்கின்றன. இந்த நெருக்கடிகளுக்குள்ளால்தான் எமது எதிர்கால சந்ததியை, அறிவை முதல் நோக்காய்க் கொண்ட, எல்லையற்ற வாசிப்புலகை நோக்கி அழைத்துச் செல்ல வேண்டியிருக்கிறது. சிறுவர் இலக்கியங்களும் தனியான சிறுவர் வாசிகசாலைகளும் இந்த இடத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன.

ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

பள்ளிவாயல் நிருவாகிகளும் பொருளாதாரப் பின்னணியும்.


'ஸகாத் கொடுக்காதவர்கள், கொடுக்கத் தகுதியில்லாதவர்கள் பள்ளிவாயல் நிருவாகிகளாக இருக்க முடியுமா?' என்பது ஒரு சகோதரரின் முகப் புத்தகக் கேள்வி. 'நாம இன்னும் ஸகாத் கொடுக்கத் தகுதி ஆகல்ல. அதனால நாம பள்ளி நிருவாகி ஆக முடியாது' என்பது வேறொரு சகோதரரின் கூற்று. ஸகாத் கொடுக்கும் தகுதியிலுள்ள செல்வந்தர்கள் மட்டுமே பள்ளிவாயல் நிருவாகிகளாக இருக்க முடியும் எனும் கருத்து மேலெழுந்து வருவதை அவதானிக்க முடிகிறது.

சனி, 4 பிப்ரவரி, 2017

சுதந்திர தினமும் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் பாத்திரமும். 

பிரதேசம் சார்ந்த அல்லது இனம், கோத்திரம் சார்ந்த அடையாளங்களை இஸ்லாம் ஒருபோதும் நிராகரிக்கவில்லை. அவற்றை இயல்பானதாகவும் இறைவனின் ஏற்பாடாகவுமே இறை வெளிப்பாடு அறிமுகப்படுத்துகிறது. ஆனால், இந்த அடையானங்களின் மீதான தீவிர பற்றுறுதி  பொதுவான மானிட சமத்துவத்தையும் நீதியையும் சிதைக்கக் கூடிய கருவியாக உருப்பெறும்போதுதான் அது கண்டிக்கத் தக்கதாக மாறுகிறது. இந்த வரையறைக்குள் நாட்டுப் பற்றையும் தேசிய அடையாளங்களையும் பரிசீலனைக்கு உட்படுத்துவது பொருத்தமானது. தேசத்தின் நலன், அல்லது இனத்தின் நலன் இயல்பானதாகவும்; பொதுவான மானிட விழுமியங்களோடு முரண்படாததாகவும் இருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், அது அதிகார வர்க்கத்தின் கருவியாகவும் அடக்குமுறைகளை நியாயப்படுத்துவதாகவும் மாறும்போதுதான் விமர்சனத்துக்கு  உட்படுகிறது. 

சனி, 28 ஜனவரி, 2017

ஜும்ஆ உரைகள்- பொறுப்புக்களும் நடைமுறைகளும்.


'டெங்கு நோய் ஏற்பட்டால், அதற்கு வைத்தியம் செய்ய மட்டும்தான் மருத்துவர்களுக்கு முடிகிறது. அது ஏன் ஏற்படுகிறது? எதனால் வருகிறது என்பவற்றை அவர்களால் கூற முடியவில்லை. எமக்கு முன்னுள்ள மக்கள் நுளம்புக் கடிக்குள்ளும் சாக்கடைகளுக்கு அருகிலும் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு இவ்வாறான நோய்கள் வந்ததில்லை. மனிதர்களின் கைகள் தேடிக் கொண்டவற்றின் (பாவங்களின்) விளைவு இது.' ஜூம்ஆப் பிரசங்கம் ஒன்றின்போது கதீப் ஒருவர் முன்வைத்த விடயங்கள் இவை. இக் கருத்துக்களில் உள்ள விகடங்களை சாதாரண பாடசாலை மாணவனாலேயே இனங்கண்டு கொள்ள முடியும்.

டெங்கு நோய்க்கான காரணம் மருத்துவ உலகில் தெளிவாக அறியப்பட்டிருக்கிறது. நோய்க் காரணியும் காவிகளும் இனங்காணப்பட்டிருக்கின்றன.