ஞாயிறு, 26 அக்டோபர், 2014

புதுவருட சிந்தனை - வாழ்க்கையும் வருடங்களும் 

(தனித்துவ அடையாளங்களைப் பாதுகாத்தல்)

வாழ்க்கை, காலம் எனும் பாதையின் மேல் நகர்ந்து செல்கிறது. இதனால்தான் வாழ்க்கை 'பயணம்' எனும் வர்ணனையைச் சுமந்து கொள்கிறது. அது இறுக்கமான ஒற்றையடிப் பாதையில் மேற்கொள்ளப்படும் பயணம். எங்களால் திரும்பிப் பார்க்க மட்டுமே முடியும், திரும்பி நடக்க முடியாது. முடிவு தெரியாத தனித்தனிப் பாதைகளில் ஒவ்வொருவராகப் பயணிக்கிறோம். அறிவியலின் அடிப்படையில் காலம், வெளி எனும் இரு விடயங்களும்தான் பிரபஞ்சத்தின் அடிப்படை அம்சங்களாகும். வெளி முப்பரிமாணம் கொண்டது. காலம் ஒரு பரிமாணம் கொண்டது. காலத்தைப் பயன்படுத்தும் நோக்கில் அதனைப் பகுத்து வைத்திருக்கிறோம். ஒழுங்காக நடைபெறும் நிகழ்ச்சிகளே காலத்தை அளவிடப் பயன்படுகின்றன. ஓர் அணுவினுள் நடைபெறும் அதிர்வுகள் தொடக்கம் சூரியன் மற்றும் வெள்ளுடுத் தொகுதிகளில் நடைபெறும் அசைவுகள் வரை இந்த நிகழ்ச்சிகள் வேறுபடும். பிளாங்க் நேர அலகு தொடக்கம்  ஆண்டு, நூற்றாண்டு வரை இதன் அலகுகளும் வேறுபடும்.

செவ்வாய், 14 அக்டோபர், 2014

நூல் அறிமுகம்:- 'இஸ்லாம் வழிகாட்டி'-தரம் 10, 11க்கான வினா-விடை'

'இஸ்லாம் வழிகாட்டி – கரம் 10, 11 க்கான வினா விடை' எனும் நூல் க.பொ.த (சாதாரண தரம்) பரீட்சையில் இஸ்லாம் பாடத்துக்குத் தோற்றும் மாணவர்களின் நலன் கருதி தயாரிக்கப்பட்டதாகும். காங்கேயனோடை அல்-அக்ஸா மகா வித்தியாலயத்தில் இஸ்லாம் பாட ஆசியராகப் பணிபுரியும் மௌலவி ஏ.ஜே.முஹம்மது அஸ்ரப் (பலாஹி) அவர்களால் எழுதப்பட்டுள்ள இந்நூலானது க.பொ.த சாதாரண தர இஸ்லாம் பாடத் திட்டத்தை முழுமையாகத் தழுவியதாகும். அகீதா (கொள்கை), இபாதத் (வணக்க வழிபாடுகள்), அஹ்லாக் (நற்பண்புகள்), முஆமலாத் (கொடுக்கல்-வாங்கல்), மஸாதிரு ஷரிஆ-ஜினாயாத் (சட்ட மூலாதாரம்,குற்றவியல்), முனாகஹாத் (குடும்;ப வாழ்வு), அத்தாரிகுல் இஸ்லாமியா (இஸ்லாமிய வரலாறு), மபாஹிமுல் இஸ்லாமிய்யா ஆகிய தலைப்புக்களில் தரம்-10இலும் 11இலும் உள்ள விடயங்கள் வினா-விடை ஒழுங்கில் தலைப்பு வாரியாக தொகுக்கப்பட்டுள்ளன.

புதன், 1 அக்டோபர், 2014

சிறுவர் உரிமைகள்-ஓர் ஆன்மீக, சமூக நோக்கு

அருள் நிறைந்த புனித பூமி. பாதையில் அமைதியாக நடந்து செல்கின்றனர் முஹம்மத் அபூ தாஹிர், நதீம் நவ்வாராஹ் ஆகிய இரு பலஸ்தீனச் சிறுவர்கள். ஆனால் இனவெறி மிக்க இஸ்ரேலிய படையின் ஆயுதங்கள் அவர்களைச் சிதைத்துவிடுகின்றன. இந்த ஆண்டில் நடைபெற்ற கொடூரங்களில் இதுவும் ஒன்று. இவ்வாறு ஆயிரக் கணக்கான சிறுவர்கள் ஒவ்வொரு நாளும் அதிகார வெறியின் அகோரப் பசிக்கு ஆளாக வேண்டிய நிலை இன்னும் தொடர்கிறது.
வேண்டுமென்றே திணிக்கப்படுகிற யுத்தங்களால், தாம் ஏன் கொல்லப்படுகிறோம் என்பதை அறியாமலேயே கொல்லப்படுகிற ஆயிரக் கணக்கான பலஸ்தீன, ஈராக்கிய, சிரிய நாட்டு சிறார்களுக்கு நீதி வழங்குவதில் உலகம் தவறியிருக்கிறது என்பதே உண்மையாகும்.

திங்கள், 29 செப்டம்பர், 2014

நிகழ்வு:- காங்கேயனோடை அல்-அக்ஸா மகா வித்தியாலய சிறுவர் தினப் போட்டிகள்

எதிர்வரும் சிறுவர் தினத்தை முன்னிட்டு பாடசாலை மட்டத்திலான சிறுவர் தினப் போட்டி நிகழ்வுகள் இன்று காங்கேயனோடை அல்-அக்ஸா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றன. இப்போட்டிகள் பாடசாலையில் கற்பிக்கின்ற ஆசிரியர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றன. கட்டுரை, கவிதை, பேச்சு, சித்திரம், ஆக்கம் ஆகிய போட்டிகள் நடாத்தப்பட்டு முதலாம், இரண்டாம், மூன்றாம் இடத்தைப் பெறுகின்ற மாணவர்களுக்கு எதிர்வரும் முதலாம் திகதி பாடசாலையில் நடைபெறவுள்ள சிறுவர் தின விழாவில் பரிசில்கள் வழங்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திங்கள், 15 செப்டம்பர், 2014

சீமா- நீதி கோரும் கண்ணீர் ஓவியம்

மாலை நேரத்தில் திடீரெனப் பெய்த மழையின் அழகில் மெய் மறந்து துள்ளி விளையாடிக்கொண்டிருந்தாள் அந்தச் சிறுமி. ஆனால், சற்று நேரத்துக்குள்ளால் அவளது மூச்சு அடங்கிப் போகிறது. சமூகச் சீரழிவின் இருண்ட கடதாசிகளில் அவளது வரலாறும் குறித்து வைக்கப்படுகிறது. ஊருக்குள் விட்டுவைக்கப்பட்ட மனித மிருகம் ஒன்று அந்த மழலை மலரைக் கசக்கிப் போட்டது.
பாத்திமா சீமா பாதுகாப்பற்ற ஒரு சமூகச் சூழலின் அடையாளச் சின்னமாய் மாறிப் போகிறாள். பேச முடியாமல் வாய் அடைக்கப்பட்ட நிலையில் மரணித்துப் போன அவள் நல்லோர்களின் உள்ளத்து உணர்வுகளாய் மாறி நியாயம் கேட்கிறாள். அவள் வேண்டுவதெல்லாம் 'என்னைக் கொன்ற மிருகத்தைக் கொன்று விடுங்கள்' என்பதுதான்.

திங்கள், 30 ஜூன், 2014

 மனித உடல் எனும் அற்புதப் படைப்பு

 'அவன்தான் அல்லாஹ் உங்கள் இறைவன். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. எல்லாப் பொருட்களின் படைப்பாளனும் அவனே. ஆகவே, அவனையே வழிபடுங்கள். இன்னும் அவனே எல்லாக் காரியங்களையும் கண்காணிப்பவன்.' –அல்குர்ஆன் 6:102
இறைவனின் அற்புதப் படைப்பான மனித உடல் பற்றிய சில தகவல்கள் இதோ:

திங்கள், 21 ஏப்ரல், 2014

நிகழ்வு:- றிஸ்வி நகர், மஸ்ஜிதுஸ் ஸலாஹ் பள்ளிவாயல் திறப்பு விழா.

இலங்கை ஜமாஅதே இஸ்லாமி காத்தான்குடி மன்றத்தின் வேண்டுகோளின் பேரில் ஜமாஅத்தின் சமூக வேவைப் பிரிவான இனால் புதிய காத்தான்குடி றிஸ்வி நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மஸ்ஜிதுஸ் ஸலாஹ் பள்ளிவாயல் இன்று (21-04-2014) அஸர் தொழுகையுடன் திறந்துவைக்கப்பட்டது.

திங்கள், 14 ஏப்ரல், 2014

நிகழ்வு - இஸ்லாமிய உயர் கல்வி நிறுவனங்களுக்குச் செல்ல விரும்பும் மாணவர்களுக்கான வழிகாட்டற் கருத்தரங்கு

இலங்கை ஜமாஅதே இஸ்லாமி காத்தான்குடி மன்றத்தின் அனுசரணையுடன் காத்தான்குடி பிரதேச செயலக தொழில் உருவாக்கம் மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட, இஸ்லாமிய உயர் கல்வி நிறுவனங்களுக்குச் செல்ல விரும்பும் மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு இன்று (14-04-2014) காலை 9:00 மணி முதல் நண்பகல் 12:00 வரை காத்தான்குடி பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

நிகழ்வு-இலங்கையின் 66வது சுதந்திர தினம்

இலங்கை ஒரு பல்லின சமூகத்தைக் கொண்ட நாடாகும். புல்வேறுபட்டபட்ட இயற்கை வளங்களையும் கொண்ட அழகிய நாடு இலங்கை. இலங்கையின் தரைத்தோற்றப் பல்வகைமை, உயிரினப் பல்வகைமை போன்று அதன் கலாச்சாரப் பல்வகைமையும் இந்நாட்டுக்கு அழகு சேர்ப்பதாகும். இத்தகைய புரிந்துணர்வும் மனப்பாங்கும் இந்நாட்டு மக்களின் உள்ளங்களில் ஏற்படுத்தப்படும்போதுதான் இலங்கை சமாதான பூமியாக அன்பினாலும் அரவணைப்பினாலும் மனிதாபிமானத்தினாலும் மேலும் அழகுபடுத்தப்படும்.