ஞாயிறு, 29 டிசம்பர், 2013

உரை- அடையாளங்களை விட்டுச் செல்லும் பயனுள்ள வாழ்க்கைப் பயணம்

(காங்கேயனோடை அல்-அக்ஸா மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற 2013ம் ஆண்டுக்கான இறுதி மாணவர் மன்ற நிகழ்வில் ஆற்றப்பட்ட தலைமையுரை)

எதிர்காலத் தலைவர்களின் ஆற்றல்களை வளர்த்துக்கொள்ளும் பயிற்சிக் களமான இவ்வரங்கிற்கு வந்திருக்கும் உங்கள் அனைவரையும் வரவேற்பதில் இதன் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பவன் என்றவகையில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த அரங்கினைப் பயன்படுத்திக் கொள்ள நாம் அனைவரும் முயற்சி செய்ய வேண்டும்.

செவ்வாய், 3 டிசம்பர், 2013

நிகழ்வு – கண்காட்சியும் வயல் விழாவும்

மட்டக்களப்பு விவசாயத் திணைக்களத்தின் அனுசரணையுடன் காத்தான்குடி கமநல சேவைகள் நிலையத்தினால் செயற்படுத்தப்படும் பாடசாலை வீட்டுத்தோட்ட நிகழ்ச்சித் திட்டத்தின் ஓர் அங்கமாக கண்காட்சியும் வயல் விழாவும் 03-12-2013 (1435-01-29) காலை 10 மணியளவில் காத்தான்குடி மட்/மம/அந்-நாஸர் வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் இ.ரா.கரிகரன், மட்டக்களப்பு மத்தி வலய உதவி விவசாயப் பணிப்பாளர் செல்வி இ.சிவஞானம், பிரதேச செயலக திவிநெகும உத்தியோகத்தர் உட்பட பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.

புதன், 20 நவம்பர், 2013

அறிவு பூர்வமாக உங்களது மழலைகளை பயிற்றுவிக்க விரும்புகிறீர்களா ?

தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது மத்ரஸது தாருல் ஹஸனாத் குர்ஆன் பாடசாலை. குழந்தைகளின் உளவியலுக்கு ஏற்ற கவர்ச்சிகரமான நவீன கற்பித்தல் உத்திகளுடன் அல்-குர்ஆனைக் கற்பதற்கான வாய்ப்பு 5 வயது முதல்  ஓதி முடிக்கும் வரையான சிறந்த பாடத்திட்டம்.  நல்லொழுக்கமும் சமனிலை ஆழுமையும் கொண்ட இஸ்லாத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் நற் பிரஜையாக உங்கள் குழந்தைகளும் மாற வேண்டுமா? ஆரம்ப பாடத்துக்கான அறிமுகம் கீழே தரப்பட்டுள்ளது.

சனி, 16 நவம்பர், 2013

நிகழ்வு-கல்வி மானி முதலாம் வருட மாணவர்களை வரவேற்றல்

தேசிய கல்வி நிறுவகத்தின் மட்டக்களப்பு பிராந்திய கற்கை நிலையத்தில் இம்முறை கல்வி மானி பட்டக் கற்கை நெறியினைப் பயில்வதற்காகத் தெரிவாகியுள்ள முதலாம் வருட ஆசிரிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் திசைமுகப்படுத்தும் நிகழ்வும் 16-11-2013 காலை 10 மணியளவில் மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில்  பிராந்தியக் கற்கை நிலையத்தின் இணைப்பாளரும் மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை அதிபருமான திரு. எஸ். யோகராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. குறித்த கற்கை நிலையத்தில் கல்வி மானிப் பட்டக் கற்கை நெறியினைத் தொடரும் இரண்டாம், மூன்றாம் வருட ஆசிரிய மாணவர்களின் அனுசரணையுடன் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

புகைப்பட உதவி:- ஜனாப் ஏ.எல்.அப்துல் அஸீஸ் (மூன்றாம் வருட ஆசிரிய மாணவர்)

புதன், 13 நவம்பர், 2013

ஆசூறா - அடிமைத் தளையில் இருந்து விடுதலை

உலக அதிசயமாகத் திகழும் பிரமிட்டுக்களின் பின்னால் ஒழிந்திருக்கும் சோக வரலாறு அனேகமானோர் அறிந்ததே. மனிதனின் அடிமைத்துவ வரலாற்றின் இன்னொரு பக்கமே, ஓங்கி உயர்ந்து நிற்கும் இந்தக் கல்லறைகளாகும். வாழும்போது ஆடம்பரமாக வாழ்ந்த ஆதிக்க சமூகம் ஒன்று, மரணித்த பின்னரும் ஆடம்பரமாக வாழ வேண்டும் என்ற அற்பத்தனமான பேராசையின் அடித்தளத்தில் உருவாக்கப்பட்டவையே இந்த அதிசயக் கட்டடங்களாகும்.

இவ்வாறான ஆதிக்க வெறியின் போதையில் மயங்கிக் கிடந்த, எகிப்திய ஆதிக்க சக்திகளிடம் அடிமைப்பட்டு நசுக்கப்பட்ட சமூகமே இஸ்ரேலிய சமூகமாகும். வாழ முடியாமல் மூச்சுத் திணறிக்கொண்டிருந்த அந்த சமூகத்திற்கு, மூஸா (அலை) எனும் அற்புத மனிதரின் மூலம், இறைவன் விடுதலை கொடுத்தான். அந்த அற்புத வரலாற்றின் நினைவு தினமே ஆசூறா.

செவ்வாய், 5 நவம்பர், 2013

இஸ்லாமியப் புதுவருடமும் இஸ்லாமிய நாட்காட்டியும்

மற்றுமொரு இஸ்லாமியப் புதுவருடம் மலர்ந்துள்ளது. இஸ்லாமிய வரலாற்றில் முக்கியமான அரசியல் சமூக மாற்றத்திற்கு வித்திட்ட உன்னதமான ஹிஜ்ரா நிகழ்வின் வயதினை அது எடுத்துக் கூறுகிறது. புதிய திட்டங்களுடனும் தியாக உணர்வுடனும் மறுமலர்ச்சிச் சிந்தனைகளுடனும் சமூகம் வழிநடத்திச் செல்லப்படவேண்டியதன் தேவையை புதிய வருடப் பிறப்பு உணர்த்தி நிற்கிறது.

உலகம் முழுவதும் பல்வேறு ஆண்டுக் கணிப்பு முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இவற்றுள் பெரும்பாலானவை சமயம் சார்ந்தவையாகவே காணப்படுகின்றன. சமய நம்பிக்கையற்றோர்கூட சமயச் சார்பாக உருவாக்கப்பட்டுள்ள ஆண்டுக் கணிப்பீட்டு முறைகளில் தங்கியிருக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகிறது.

சனி, 26 அக்டோபர், 2013

நிகழ்வு: காங்கேயனோடை அல்-அக்ஸா மகா வித்தியாலய ஆக்கத்திறன் கண்காட்சி 2013

மட்/மம/காங்கேயனோடை அல்-அக்ஸா மகா வித்தியாலய ஆரம்பப் பிரிவு மாணவர்களின் 2013ம் ஆண்டுக்கான ஆக்கத்திறன் கண்காட்சி 26-10-2013 (1434-துல்'ஹஜ்-20) காலை 09:00 மணிக்கு வித்தியாலய ஆராதனை மண்டபத்தில் நடைபெற்றது. இக்கண்காட்சியில் பெருமளவான ஆக்கங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இடைநிலை வகுப்பு மாணவர்கள் சிலரும் கண்காட்சி ஒழுங்கமைப்பில் உதவி புரிந்திருந்தமையை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. பாடசாலை மட்டத்தில் நடைபெறும் இத்தகைய நிகழ்வுகள் மாணவர்களின் ஆக்கத் திறனை வளர்ப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. கண்காட்சி சிறப்புற ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. எனினும், கண்காட்சிக்கான கால இடைவெளி மிகக் குறுகியதாக இருந்தது என்பது குறிப்பிட்டுக் கூறவேண்டிய ஓர் குறைபாடாகும். இத்தகைய தரமிக்க கண்காட்சியை ஒழுங்குசெய்த ஆரம்பப் பிரிவு ஆசிரியர்களும் பங்களிப்புச் செய்த மாணவர்களும் பெற்றோர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

திங்கள், 14 அக்டோபர், 2013

நிகழ்வு:- காங்கேயனோடை மட்/மம/அல்-அக்ஸா மகா வித்தியாலய ஆசிரியர் தின விழா

காங்கேயனோடை மட்/மம/அல்-அக்ஸா மகா வித்தியாலய ஆசிரியர்களைக் கௌரவிக்கும் வகையில் குறித்த பாடசாலையில் இருந்து 2011ம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆசிரியர் தின விழா 14-10-2013 அன்று காலை 10.00 மணியளவில் பாடசாலை ஆராதனை மண்டபத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் எம்.ஐ.எம்.அப்பாஸ் (நழீமி) அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி வலய இஸ்லாம் பாட ஆசிரிய ஆலோசகர் எம்.ஐ.அப்துல் கபூர் (மதனி), காத்தான்குடி போட்டக் கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் எஸ்.எம்.சுபைர், காங்கேயனோடை ஹிஸ்புல்லாஹ் வித்தியாலய அதிபர் ஜனாப் J.சித்திகீன், பாலமுனை அலிகார் வித்தியாலய அதிபர் ஜனாப் H.M.அப்துர் ரஸ்ஸாக், காங்கேயனோடை ஜாமிஉல் மஸ்ஜித் நிருவாக சபைத் தலைவர் மௌலவி ஆதம்லெப்பை (பஹ்ஜி) கிழக்குப் பல்கலைக் கழக விரிவுரையாளர் ஏ.எம.முஜாகித் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர்.

ஞாயிறு, 6 அக்டோபர், 2013

ஆசிரியம்- ஓர் ஆன்மீக மாற்றத்தின் தேவை

'என்னால் கூடிய தூரம் பார்க்க முடிகிறது என்றால், பல திறமைசாலிகளின் தோள்மீது நான் நின்று பார்த்ததுதான் காரணம்' என பிரபலமான பௌதீகவியல் விஞ்ஞானியான சேர் ஐசாக் நியூட்டன் கூறினார். ஒரு மனிதனின் முன்னேற்றத்திலும் சாதனைகளிலும் பல்வேறுபட்ட ஆற்றல் மிக்க மனிதர்களின் பங்களிப்பு இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

இந்த அடிப்படையில்தான் ஆசிரியப் பணியும் நோக்கப்பட வேண்டியுள்ளது. ஆசிரியர்கள் ஏணிக்கும் ஓடத்திற்கும் ஒப்பிடப்படும் வழமை இருக்கிறது.

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

பேராசிரியர் டாக்டர் அப்துல்லாஹ் - வாழ்வும் படிப்பினைகளும்

பேராசிரியர் டாக்டர் அப்துல்லாஹ் வாழ்வும் படிப்பினைகளும்
2013-08-19 அன்று காலை செவிகளை எட்டிய பேராசியர் டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) அவர்களின் மரணச் செய்தி உலகெங்கும் வாழும் தமிழ் பேசும் முஸ்லிம்களின் உள்ளங்களை ஒருகணம் அதிரவைத்தது. இஸலாமிய பிரச்சாரக் களத்துக்குக் கிடைத்த அறிவியல் வளமாகக் கருதப்பட்ட பேராசிரியர் அப்துல்லாஹ் அவர்களை குறுகிய காலத்திலேயே இஸ்லாமிய உலகம் இழந்துவிட்டது. இஸ்லாமியராக வாழ்ந்த ஓரிரு வருடங்களுக்குள் தான் ஏற்றுக்கொண்ட உத்தம வாழ்க்கை நெறிக்காக அவரால் ஆற்றப்பட்ட பணிகள் அளவிடற்கரியன. பிரக்ஞையுள்ள ஒவ்வொரு மனிதனும், அவரது வாழ்விலிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் அதிகமுள்ளன.

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

நிகழ்வு:- பெருநாள் ஒன்றுகூடல்

தேசிய கல்வி நிறுவகத்தின் மட்டக்களப்பு பிராந்திய கற்கை நிலையத்தில் கல்வி மானிப் பட்டப் படிப்பை மேற்கொள்ளும் மூன்றாம் வருட ஆசிரிய மாணவர்களின் ஏற்பாட்டிலான ஈதுல் பித்ர் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்வொன்று, 2013-08-18 காலை 11 மணியளவில் மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் நடைபெற்றது. மட்டக்களப்பு பிராந்திய கற்கை நிலையத்தின் இணைப்பாளரும் மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை அதிபருமான திரு எஸ்.யோகராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிராந்திய கற்கை நிலையத்தின் விரிவுரையாளர்களும் மூன்றாம் வருட ஆசிரிய பயிலுனர்களும் கலந்து சிறப்பித்தனர்.

சனி, 8 ஜூன், 2013

நிகழ்வு-'நன்மை செய்யும் சமூகமே வெற்றி பெறும் கமூகம்' (இஜ்திமா)

இலங்கை ஜமாஅதே இஸ்லாமி, காத்தான்குடி உப பிராந்தியத்தின் ஏற்பாட்டில் ஹிஜ்ரி 1434ம் ஆண்டுக்கான 'நன்மை செய்யும் சமூகமே வெற்றி பெறும் சமூகம்' எனும் தொனிப்பொருளிலான இஜ்திமா (ஒன்றுகூடல்) நிகழ்வு 07-06-2013 அன்று இஸர் தொழுகை முதல் இரவு 9.30 மணிவரை புதிய பாலமுனை முஹிதீன் ஜூம்ஆப் பள்ளி;வாயலில் நடைபெற்றது. 
இஜ்திமா நிகழ்வுகள் பிற்பகல் 4.00 மணியளவில் அல்ஹாபிழ் ஏ.எம்.அஸ்பாக் அவர்களின் கிராஅத்துடன் ஆரம்பமாகின. இஜ்திமா நிகழ்வுகளை மௌலவி ஜே.எம்.றமீஸ் (ஹாமி) அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.

ஞாயிறு, 19 மே, 2013

மனித வள விருத்தியும் தனிமனித முயற்சியும்

(2013-09-05 அன்று காங்கேயனோடை அல்-அக்ஸா மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற மாணவர் மன்ற நிகழ்வில் ஆற்றப்பட்ட உரை)

இந்தப் பிரபஞ்சப் பெருவெளியிலுள்ள இறைவனின் படைப்புக்களில் உன்னதமான படைப்பாக மனிதன் உள்ளான். உலகிலுள்ள வளங்களிலெல்லாம் மனித வளமே சிறந்ததாகக் கருதப்படுகிறது. மிகக் குறைவான பௌதீக வளத்தைக் கொண்ட நாடுகள்கூட மனிதவளத்தை வினைத்திறனாகக் கையாண்டு உச்சக்கட்ட வளர்ச்சியைக் கண்டுள்ளமையை வரலாறு நிருபித்துள்ளது.

வியாழன், 28 மார்ச், 2013

நிகழ்வு-ஹலால் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

மட்/மம/காங்கேயனோடை அல்-அக்ஸா மகா வித்தியாலய ஆசிரியர்களுக்கான ஹலால் விழிப்புணர்வுக் கருத்தரங்கு 28-03-2013 அன்று மு.ப 11.00 மணியளவில் பாடசாலை நூலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் அஷ;ஸெய்க் எம்.ஐ.எம்.அப்பாஸ் (நளீமி), உயர்தர இஸ்லாம் பாட ஆசிரியரான மௌலவி ஏ.ஜே.அஸ்ரப் (பலாஹி), எம்.ஏ.சீ.எம்.ஜஹானி ஆகியோர் விளக்கவுரைகளை நிகழ்த்தினர்.

செவ்வாய், 26 மார்ச், 2013

சமூக, சமயவியல் நோக்கில்-ஹலால் உணவுகள்

இன்றைய சூழலில் ஹலால் பற்றிய கருத்துப் பரிமாறல்கள் தீவிரமடைந்துள்ளதைக் காணலாம். ஹலால் பற்றிய புரிந்துணர்வின்மை அண்மைக் காலத்தில் பாரிய முரண்பாடுகளைத் தோற்றுவித்துள்ளமையினையும் அவதானிக்க முடியும். 'ஹலால்' எனும் அறபு வார்த்தையானது, 'அனுமதிக்கப்பட்டது' எனும் பொருளைத் தரும். இதனோடு இணைந்ததாக ஹலால் என்பதன் எதிர்க் கருத்தைத் தரும் சொல்லான 'ஹறாம்' என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். 'ஹறாம்' எனும் அறபு வார்த்தை 'தடைசெய்யப்பட்டது' எனும் பொருளில் பயன்படுத்தப்படுகிறது

ஞாயிறு, 24 மார்ச், 2013

நிகழ்வு- சமயங்களுக்கூடாக விழுமியக் கல்வி (பல்சமயக் கருத்தரங்கு)

தேசியக் ப்கல்வி நிறுவகத்தினால் நடத்தப்படும் கல்விமானி பட்ட பாடநெறியை மட்டக்களப்பு கற்கை நிலையத்தில் தொடரும் 3ம் வருட ஆசிரிய மாணவர்களுக்கான 'சமயங்களுக்கூடாக விழுமியக் கல்வி' எனும் தலைப்பிலான பல்சமயக் கருத்தரங்கு, 24-03-2013 அன்று காலை 9:00 மணிக்கு மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை ஆராதனை மண்டபத்தில் பாடநெறி இணைப்பாளரும் அரசினர் ஆசிரியர் கலாசாலை அதிபருமான திரு ஏ.எஸ்.யோகராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. கற்கை நிலைய 3ம் வருட மாணவர், எஸ்.சுதாகரன் அவர்களின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந் நிகழ்வானது மும்மதப் இறை வணக்கங்களுடன் ஆரம்பமானது.

திங்கள், 18 மார்ச், 2013

ஹலால் விவகாரமும் நாம் பெறவேண்டிய படிப்பினைகளும்

(தானகச்) செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாததின் பெயர் அதன் மீது கூறப்பட்ட (அறுக்கப்பட்;ட)தும், கழுத்து நெரித்துச் செத்ததும், அடிபட்டுச் செத்ததும், கீNழு விழுந்து செத்ததும், கொம்பால் முட்டப் பட்டுச் செத்ததும், விலங்குகள் கடித்(துச் செத்)தவையும் உங்கள் மீது ஹராமாக்கப் பட்டிருக்கின்றன. (அனுமதிக்கப்பட்டவற்றில்) எதை நீங்கள் (உயிரோடு பார்த்து, முறைப்படி) அறுத்தீர்களோ அதைத் தவிர (அதை உண்ணலாம்.

நபி(ஸல்) அவர்களின் இறுதிப் பேருரை

நிச்சயமாக, எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அவனையே நாம் புகழ்கிறோம். அவனிடமே நாம் பாதுகாப்புத் தேடுகிறோம். நம்முடைய மனோ இச்சைகளின் தீங்குகளை விட்டும்; அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறோம். அல்லாஹ் நேர்வழி காட்டியவரை வழிகெடுப்பவர் யாருமில்லை. அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிட்டவரை நேர்வழியில் செலுத்துபவரும் யாருமில்லை. அல்லாஹ்வைத் தவிர கடவுள் இல்லையென்றும் அவன் தனித்தவன் எனவும் அவனுக்கு இணையாக யாருமில்லையெனவும் நான் சாட்சி சொல்கிறேன். இன்னும், முஹம்மது(ஸல்) அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார் எனவும் சாட்சி சொல்கிறேன்.

குர்ஆன் பேசுகிறது

-மௌலவி ஏ.ஜே.அஸ்ரப் பலாஹி

 எனது பெயர்    :-         குர்ஆன், நூர், தன்ஸீல், புர்கான் 
எனது மொழி    :-        அறபு
முதலில் இருந்த இடம் :-    லவ்ஹூல் மஹ்பூல்

பின்னர் இறக்கப்பட்ட இடம் :-    பைதுல் இஸ்ஸா (முதலாம் வானம்)

இந்த பூமிக்கு வருகை     :-    நபி (ஸல்) அவர்களின் 40ம் வயதில் ஹிறா குகையில்
இருக்கும்போது